LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
-

பக்தி எனப்படுவது யாதெனில்...

பேரரசர் அக்பர் வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு கதை, பாடலாக இங்கே:

அக்பரும் ஒருநாள் தன்னுடைய
….அழகிய குதிரை மேலமர்ந்தார்,
திக்குகள் எட்டும் நடுநடுங்க
….திமிருடன் பாய்ந்தது அக்குதிரை
கொக்குடன் மீன்கள் நடனமிடும்
….குளமதைத் தாண்டி அவர்சென்றார்,
சிக்கிய மிருகம், பறவையெல்லாம்
….சீக்கிரம் வேட்டை ஆடிவிட்டார்!

சூரிய ஒளியும் மங்கியது,
….சுந்தர மாலை மயக்கியது,
தூரிகை கொண்டு யார்வரைந்தார்
….துள்ளிடும் இயற்கை ஓவியத்தை?
கூரிய அம்பைப் புறமொதுக்கிக்
….கும்பிட அக்பர் மண்டியிட்டார்,
சீரிய இறையைத் தொழுதபடி
….சிந்தையில் அன்பைக் குவித்திட்டார்!

அப்பொழு தங்கே ஒருபெண்ணும்
….அலறிய படியே ஓடிவந்தாள்,
ஒப்பெதும் இல்லா அவள்கணவன்,
….உத்தமன் தன்னைத் தேடிவந்தாள்,
தொப்பென அவளும் அக்பர்மேல்
….துவண்டுவி ழுந்தாள், பின்எழுந்தாள்,
அப்புறம் எங்கோ விரைந்துசென்றாள்
….அவளது சுவடே காணவில்லை!

தொழுதுமு டித்த மன்னவரும்
….துள்ளிஎ ழுந்தார், அக்கணத்தில்,
அழுகைம றந்து சிரிப்போடு
….அம்மகள் வந்தாள் கணவனுடன்.
கழுகெனக் கோபப் பார்வையுடன்
….கனலென அக்பர் கர்ஜித்தார்,
‘கொழுப்பது உனக்கு அதிகமுண்டோ?
….கொற்றவன் என்மேல் ஏன்விழுந்தாய்?’

‘கணவனைத் தேடி இங்குவந்தேன்,
…காட்டினில் பதறி அலைந்திட்டேன்,
கணமதும் வேறு கருத்தில்லை,
….காதலுடன் நான் திரிந்திட்டேன்.
குணம்நிறைக் கொழுநன் எங்கென்று
….குமுறிடும் மனத்தால், நானும்மை
வணங்கிட வில்லை, மேல்விழுந்தேன்,
….வஞ்சியை மன்னியும்’ அவள்சொன்னாள்.

‘நாதனைத் தேடும் நேரத்தில்
….நடந்தவை ஏதும் நானறியேன்,
காதலில் மனமும் குவிந்ததனால்
….கருத்தினில் வேறு கவனமில்லை!
பேதமில் இறைவன் தொழுகையிலும்,
….பிள்ளைகள் நமக்கு அந்நிலையே,
ஆதலி னால்நீர் எனைக்கண்ட
….அதிசயம் எனக்குப் புரியவில்லை!’

சுருக்கெனத் தைக்கிற அப்பெண்ணின்
….சொற்களைக் கேட்ட அக்பருக்குக்
கருவமும் கலைந்து போனதுவாம்,
….கண்களில் நீர்தான் பொங்கியதாம்,
ஒருவனைத் தொழுது வணங்கையிலே
….உலகினை மறத்தல் தான்முறையாம்,
தெருத்தெரு அலையும் நம்மனத்தின்
….திரிதலைத் தடுத்தல் பெரும்தவமாம்!

by Swathi   on 19 Aug 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.