LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நேற்று வெளியானது பரத்வாஜ்-ன் திருக்குறளிசை !!

காதல் மன்னன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ்.

இவர் கடந்த 3 ஆண்டுகளாக தமிழர்களின் புனித நூலான திருக்குறளுக்கு இசை வடிவம் கொடுத்து வருகிறார். தனது திருக்குறள் இசை வடிவம் குறித்து, இசை அமைப்பாளர் பரத்வாஜ் கூறும்போது, எனது சொந்த ஊர் திருநெல்வேலி என்றாலும் நான் பிறந்து வளர்ந்ததெல்லாமே டெல்லிதான்.

அதனால் சினிமாவில் இசையமைப்பாளரான பிறகுதான் எனக்கு திருக்குறள் பற்றி எனக்கு தெரியவந்தது.

இரண்டு அடியில் இருக்கும் ஒவ்வொரு திருக்குறளிலும் அடங்கியருக்கும் ஆழமான கருத்துக்கள் என்னை கவர்ந்தன. அதனால், திருக்குறளுக்கு இசை வடிவம் கொடுத்து முழுமையாக மக்களை சென்றடைய செய்ய வேண்டும் என சிந்தித்தேன்.

அப்போது ஒவ்வொரு திருக்குறளிலும் தாளக்கட்டை இருப்பதை கண்டறிந்தேன். 1330 திருக்குறளுக்கும் இசையமைத்தேன். அதில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என இருக்கும் திருக்குறளில் முதல் கட்டமாக, அறத்துப்பாலை எடுத்துக்கொண்டு, அதிலுள்ள திருக்குறளையும் எஸ்.பி.பி.,  சித்ரா என முன்னணி பாடகர் பாடகிகளை வைத்து பாட வைத்தேன்.

அதோடு அந்தந்த திருக்குறளின் பொருள்களையும் பதிவு செய்தேன்.குறிப்பாக, பத்து கடவுள் வாழ்த்தை பத்து மத தலைவர்களை கொண்டு பாட வைத்தேன். காரணம், திருக்குறள் அனைத்து தமிழர்களுக்கும் சொந்தமானது.

அதோடு உலகமெங்கிலுமுள்ள தமிழ் பாடகர்கள் அனைவரையும் பாட வைத்திருக்கிறேன். மேலும், உலகிலுள்ள அனைத்து தமிழ் இல்லங்களிலும் இந்த திருக்குறள் ஒலிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

அதோடு, இந்திய அளவில் உள்ள பள்ளி- கல்லூரிகளிலும் திருக்குறளை விற்பனை செய்ய மத்திய மாநில அரசுகளின் உதவியை நாடப்போகிறேன் என்று கூறுகிறார் பரத்வாஜ்.

by Swathi   on 11 Jan 2015  0 Comments
Tags: பரத்வாஜ்   திருக்குறள்   திருக்குறள் இசை ஆல்பம்   Bharadwaj   Thirukkural Music Album        
 தொடர்புடையவை-Related Articles
Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Swahili (சுவாஹிலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்! திருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி ! தமிழ் அறிஞர்கள் புகழாரம்!
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில்  திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா ! திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா !
மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !! மலேசிய பள்ளிகளில் திருக்குறள் !!
ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன? ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன?
ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை
வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !! வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !!
தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் ! தண்ணீர் குடுவையில் திருக்குறள் - சிங்கப்பூர் !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.