LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

பாரதியின் கனவு

அன்பு நிலைத்திடச் சொன்னாய் – நெஞ்சில்
அச்சம் தவிர்க்கவே பாடல் புனைந்தாய்
இன்பம் தருவிக்கும் சொல்லால் – நித்தம்
ஈதலும் காதலும் வேதமும் சொன்னாய்.

மானம் உயர்வெனச் சொன்னாய் – வீணில்
மாந்தரில் பேதங்கள் ஏனென்றுரைத்தே
கானம் பலவற்றைத் தந்தாய் – இன்றுன்
கானங்கள் ஊமைகளானது ஏனோ?

தாய்மொழி நேசிக்கச் சொன்னாய் – இன்று
செந்தமிழ் என்றொரு சுந்தர மொழியோ
வாய்வழிச் சேதியென்றாச்சு – தமிழ்
பேசுதல் கீழென்ற சூழலுண்டாச்சு
பள்ளித்தலமெங்கும் கோயில் – என்று
பாடிக் கனவுகள் கண்டதும் நீயே
அள்ளும் பணத்தினில் மட்டும் – பள்ளி
ஆலய உண்டியல் ஆனது ஏனோ?

மனிதர்க்கு உணவில்லை யென்றால் – அன்று
ஜகத்தினை அழித்திடப் பொங்கி யெழுந்தாய்
இனியந்தக் கோபங்கள் வேண்டாம் – ஜகம்
உழவின்றி உணவின்றி உயிரின்றிச் சாகும்.
மெச்சிப் புகழ்ந்திட்டபோதும் – அந்த
மொத்தக் கவிகளும் வீணாகலாச்சு.
துச்சமென்றே உந்தன் சொல்லை – மனிதர்
தூக்கி எறிந்தொரு நூற்றாண்டு ஆச்சு.

நல்லதோர் வீணை கிடைத்தே – அதன்
நரம்பினைக் கொய்திட்ட மக்களின் தேசம்
சொல்லடி சக்தி மாகாளி – இன்னும்
எத்தனை பாரதி வந்தால் திருந்தும்?...

by Rajeshkumar Jayaraman   on 12 Dec 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.