பா.ஜ., கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே., அத்வானி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இது தொடர்பான கடிதத்தை கட்சி தலைவர் ராஜ்நாத்சிங்கிற்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். அத்வானியின் ராஜினாமா விவகாரம் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜினாமாவை ஏற்க மறுத்துள்ள பா.ஜ.க நிர்வாகிகள் அத்வானியை சமரசம் செய்ய முக்கிய தலைவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
கோவாவில் நடைபெற்ற பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடிக்கு தேர்தல் பிரசார குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த பதவி அளித்ததில் அத்வானி அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. மேலும் இதனை உறுதி படுத்தும் விதத்தில் அத்வானி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை.இந்நிலையில் மோடி பதவி பெற்ற கையோடு, அத்வானியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆசி பெற்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
|