பெல்லூர் கிரைஷ்ணமாச்சார் சுந்தரராஜ ஐயாங்கார் என்ற இயற்பெயர் கொண்ட B.K.S.ஐயங்கார் அவர்கள் இன்று(20-Aug-2014) தனது 94வது வயதில் இயற்கை எய்தினார். மேற்கத்திய நாடுகளுக்கு இந்திய யோக முறையை கொண்டு சேர்த்ததில் இவருடைய அமைப்பு மிகப்பெரிய பங்களிப்பை செய்தது இது ஐயங்கார் யோகா அல்லது BKS யோகா என்று பரவாலாக அழைக்கப்படுகிறது.
இவர் 14-டிசம்பர்-1918-ல் இன்றைய கர்நாடகா மாநிலத்தில் பெல்லூர் எனும் இடத்தில் பிறந்தார். 1952ல் இவர் லண்டன், சுவிட்சர்லாந்து மற்றும் பாரீஸ் போன்ற நாடுகளில் யோகப் பயிற்சி அளித்தார். 1966ல் வெளிவந்த Light of Yoga என்ற இவரது நூலும் அதைத் தொடர்ந்து வெளிவந்த Pranayama and Various aspect of Yoga Philosophy போன்ற நூலும் வெளிவந்து பிரபலமடைந்தது. இவரது நூல் சுமார் 17க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் இதுவரை 14 நூல்களை எழுதியுள்ளார்.
1975-ல் இவர் ரமாமணி நினைவு யோகா நிலையத்தை இவரது மனைவியின் பெயரில் புனேயில் தொடங்கினார். 2005-ல் B.K.S.ஐயங்கார் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார் அந்த நாளை (அக்டோபர் 3, 2005ஐ) B.K.S. ஐயங்கார் தினம் என்று சான்பிரான்சிஸ்கோ சிட்டி அனுசரித்து கவுரவித்தது. இவருக்கு 2011ல் சீனாவில் பீஜிங்ல் அஞ்சல் தலை வெளியிட்டு சீனா மரியாதை செய்தது. சீனாவில் இவரது ஐயங்கார் யோக நிலையத்தில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் சீனாவின் 57 நகரங்களில் யோகா கற்றுக்கொள்கிறார்கள்.
இவருக்கு 1991-ல் பத்ம ஸ்ரீ விருதும், 2002-ல் பத்ம பூஷன் விருதும், 2014-ல் பத்ம விபூஷன் விருதும் வழங்கி இந்திய அரசு கவுரவித்தது. மேலும் 2004-ல் ஐயங்கார் டைம்ஸ் பத்திரிகையால் உலகின் 100 முக்கிய மனிதர்களின் பட்டியலில் இடம்பெற்றார்.
யோகா உலகெங்கும் பரவ தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பி.கே.எஸ்.ஐயங்காரின் ஆத்மா சாந்தியடையவும் அவருடைய சீடர்கள் தொடர்ந்து இந்திய யோகா முறையை உலகெங்கும் பரப்பவும் இறக்கை அருள் புரியட்டும்.
-வலைத்தமிழ் ஆசிரியர் குழு
|