காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாபி சிம்ஹா, தொடர்ந்து, பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் அனைவரது நன்மதிப்பையும் பெற்று வருகிறார்.
சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டாவில் அசால்ட் சேதுவாக இவர் நடித்த பாத்திரம் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது, ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்துள்ள பாபி, அடுத்ததாக உறுமீன் என்ற படத்தில் சோலோ ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதையடுத்து மரியான் படத்தை இயக்கிய பரத்பாலா இயக்கத்தில் பாபி ஹீரோவாக நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. .
|