ரயில் நிலையங்களில் குப்பைகளாக தேங்கும், காலி குடி நீர் பாட்டில்களை, மறு சுழற்சி முறையில் பயன்படுத்தம் விதமாக, காலி குடி நீர் பாட்டில்களை கொடுத்து, ரயில் கட்டணம் செலுத்தும் திட்டத்தை பீஜிங் சப்வே ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தால், பயணிகளுக்கு, ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு டிக்கெட் எடுக்கும் அளவுக்கு பணம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
|