|
||||||||
கத்திரிக்காய் பிரியாணி(Brinjal Biryani) |
||||||||
தேவையானவை : அரிசி – 2 கப் கத்திரிக்காய் – கால் கிலோ இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் தேங்காய்பால் – 1/2 கப் சோம்பு – 1/2 ஸ்பூன் பட்டை – 1 கிராம்பு – 1 மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் தயிர் – 2 ஸ்பூன் மல்லித்தூள் – 3 ஸ்பூன் கடலைப்பருப்பு – 50 கிராம் மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன் பெரிய வெங்காயம் – 4 தக்காளி – கால் கிலோ பச்சை மிளகாய் – 5 நெய் – 50 கிராம் கறிவேப்பிலை – 1 கொத்து உப்பு – தேவையான அளவு முந்திரி – 10 கிராம் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் அரிசியை ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து அத்தனுடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.தக்காளியையும் சேர்த்து வதக்கி அதனுடன் கத்திரிக்காய் போட்டு நன்கு வதக்கவும். 2.கத்திரிக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கியவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் தயிர், தேங்காய்பால் ஊற்றி வதக்கி அரிசியையும் போட்டு நன்கு கிளறவும். 3.நன்கு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும்,நெய் ஊற்றி கொத்தமல்லி தூவி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து முந்திரி, கடலைப்பருப்பு போட்டு சாதம் உடையாமல் கிளறி பரிமாறலாம். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|