பிரிட்டனில் தஞ்சம் அடைந்த ஈழ தமிழர்களை வெளியேற்ற பிரிட்டன் நீதிமன்றம் தடை விதித்துள்ளது, இலங்கையில் கடந்த 2009 ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஏராளமான தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினார்கள். இதனால் பல தமிழர்கள் இலங்கையை விட்டு பல்வேறு நாடுகளில் குடியேறினர். தற்போது பிரட்டனில் குடிபுகுந்த தமிழர்களை பிரிட்டன் குடியேற்றத் துறை வெளியேற்றி வருகிறது. இதற்கு அந்நாட்டு மனித உரிமைகள் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த பிரிட்டன் நீதிமன்றம் பிரிட்டனில் இருந்து இலங்கை தமிழர்களை வெளியேற்ற தடை விதித்துள்ளது. பிரிட்டன் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அந்நாட்டு குடியேற்றத் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
|