LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்டை 31 செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோ விண்ணில் ஏவியது!

இஸ்ரோ தயாரித்த நிலப்பரப்பு கண்காணிப்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கு உதவும் செயற்கைக்கோளான ஸ்ரீஹைசிஸ்’  உட்பட 31 செயற்கைக்கோள்களை  பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் உதவியுடன் இஸ்ரோ  வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. 

நிலப்பகுதிகளை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைக் கோள்களை வடிவமைத்து பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் உதவியுடன் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது.

இதையடுத்து, பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் உதவியுடன் `ஹைசிஸ்’ என்ற  நிலப்பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைக்கோள் மற்றும் வணிக ரீதியாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வந்தது. 

இந்த நிலையில், அதற்கான பணிகள் முடிவடைந்ததையடுத்து பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்டை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேர கவுன்டவுன் தொடங்கியது. 

அதைத்தொடர்ந்து பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்டை  இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியில் இருந்து ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடங்கள் 27 வினாடிகளில் இந்திய செயற்கைக்கோளான `ஹைசிஸ்’ அதன் திட்டமிடப்பட்ட 636 கிலோ மீட்டர் உயரத்திலும், 97.957 டிகிரி புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 

அதைத்தொடர்ந்து, விண்ணில் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்டின் இன்ஜின் 2 முறை  நிறுத்தப்பட்டு வெற்றிகரமாக மீண்டும் இயக்கப்பட்டது. அதன்பின் அமெரிக்காவைச் சேர்ந்த 23 செயற்கைக்கோள்கள் மற்றும் ஆஸ்திரேலியா, கனடா, பின்லாந்து, கொலம்பியா, மலேசியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் 7  செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 1 மணி நேரம் 52 நிமிடங்களுக்கு பின், அவற்றின் புவி வட்டப்பாதையில் 504 கி.மீ உயரத்தில், 97.468 டிகிரியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி முடித்தது. 

இஸ்ரோவினால் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட இந்தியாவின் ஸ்ரீஹைசிஸ்’  செயற்கைக்கோளானது வனப்பகுதி, வேளாண்மையை மேம்படுத்த, கடலோர பகுதி,  உள்நாட்டு  நீர்நிலைகளை அதிநவீன கேமரா கொண்டு புகைப்படம் எடுத்து கண்காணிக்கும்.  

மண்வளம் சார்ந்த தரவுகளை அனுப்பி விவசாயத்தை மேம்படுத்த உதவும், ராணுவ பணிகளுக்கும் இது பயன்படும்.  இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். 31 செயற்கைக் கோள்கள்களும் அதன் புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதையடுத்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் சக விஞ்ஞானிகளுடன் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:

பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ராக்கெட் மூலம் ஹைசிஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், வணிக ரீதியாக விண்ணுக்கு அனுப்பப்பட்ட 30 செயற்கை கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தபட்டு உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த ஸ்ரீஹைசிஸ்’ செயற்கைக்கோள் சண்டிகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் தயாரிக்கப்பட்டது. இதில் அதிநவீன புகைப்பட கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பூமியில் உள்ள இடங்களை துல்லியமாக படம்பிடித்து அனுப்ப முடியும்.

விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் இந்த செயற்கைக்கோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வரும் டிசம்பர் 5ம் தேதி பிரெஞ்சு கயானாவில் இருந்து அதிக எடைகொண்ட ஜி சாட் - 11 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. 

இதையடுத்து, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அடுத்து வரும் 20 நாள்களுக்குள் ஜி.எஸ்.எல்.வி ஜிசாட் - 7 ஏ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுகிறது.

இஸ்ரோ இதுவரை 20 நாடுகளை சேர்ந்த, 270 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி உள்ளது. இது உலக அளவில் இந்தியாவுக்கு நன்மதிப்பை பெற்றுத் தந்துள்ளது. தற்போது, புவி வட்டப்பாதையில் இஸ்ரோவின் 47 செயற்கைக் கோள்கள் இயங்கி வருகின்றன. 

இந்த ஆண்டின் 6வது செயற்கைக்கோள் இதுவாகும். அடுத்த ஆண்டு 12 முதல் 14 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் `ரிமோட் சென்சிங்’’ கொண்டு நாட்டின் பாதுகாப்பை ஆராய்ந்து வருகிறது. ‘ஹைசிஸ்’ செயற்கைக் கோள் தீவிரவாதத்தை கண்காணிக்க விண்ணுக்கு அனுப்பப்படவில்லை. 

இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட் பி.எஸ்.எல்.வி ரகத்தில் விண்ணில் ஏவப்படும் 45வது ராக்கெட்டாகும். இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் 68வது ராக்கெட்டாகும். முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 34வது ராக்கெட் ஆகும். இதேபோல், இந்த ஆண்டின் 6வது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

by Mani Bharathi   on 01 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.