|
|||||
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி.44 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது! |
|||||
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து மைக்ரோசாட்-ஆர், கலாம் சாட் ஆகிய 2 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஒ பயன்பாட்டிற்காக 690 கிலோ எடைகொண்ட மைக்ரோசாட்-ஆர் என்ற செயற்கைக் கோள், பி.எஸ்.எல்.வி.-சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. முன்னதாக பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட் மூலம் வனப்பகுதி, வேளாண்மை, உள்நாட்டு நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை கண்காணிக்க ‘ஹைசிஸ்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் செயற்கைக் கோளுடன் வெளிநாடுகளை சேர்ந்த 30 செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமான நிலைநிறுத்தப்பட்டன. இந்நிலையில் மைக்ரோசாட்-ஆர் மற்றும் 34 கிராம் எடையில் கலாம்சாட் என்ற மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோளும் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டுடன் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள்கள், நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. புவி அமைப்பு மற்றும் நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிக்க மைக்ரோசாட் - ஆர் இமேஜிங் செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. இதனுடன் தமிழக மாணவர்கள் உருவாக்கியுள்ள கலாம்சாட் என்ற குறைந்த எடை உடைய செயற்கைகோளையும் சுமந்தபடி பி.எஸ்.எல்.வி., - சி 44 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்ட 4 நிலைகளை கொண்டது. முதல் நிலையில் 139 டன் திட எரிபொருள் கொண்ட மிகப்பெரிய ராக்கெட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
செயற்கை கோள்களின் சுற்று வட்டப்பாதையை அதிகரிக்கும் வகையிலான பி.எஸ்.எல்.வி.-டி.எல். என்ற புதிய தொழில்நுட்பம் முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனை பரிசோதிக்கும் வகையில், மாணவர்கள் தயாரித்த ‘கலாம் சாட்’ செயற்கை கோள் பி.எஸ்.எல்.வி.-டி.எல். தொழில்நுட்ப உதவியுடன் 450 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதுவரை ராக்கெட்டுகளின் 4-வது நிலையில் செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டது இல்லை. முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டின் 4-வது நிலையில் 36 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய அளவிலான ‘கலாம் சாட்’ செயற்கை கோள் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 4 நிலைகளை கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 274.12 கி.மீட்டர் தூரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. புதிய தொழில்நுட்பம் மூலமாக இரு செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சந்திரயான்-2 உள்பட 32 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில், இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் 53 இந்திய செயற்கை கோள்களும் மற்றும் 269 வெளிநாட்டு செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ள முதல் ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பி.எஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் இது 46- வது ராக்கெட் ஆகும். |
|||||
by Mani Bharathi on 25 Jan 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|