தேவையானவை :
புளித்த தயிர் - 1 கப் தேங்காய் - கால் கப் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிது முந்திரி - 4 பச்சை மிளகாய் - 2 தக்காளி - 1 கடுகு - அரை டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன் உடைத்த உளுந்து - அரை டேபிள் ஸ்பூன் பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை - 1 கொத்து வெந்தயத்தூள் - 1/4 டேபிள் ஸ்பூன் வரமிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. புளித்த தயிர், மஞ்சள் தூள், உப்பு, ஆகியவற்றை தண்ணீர் கலக்காமல் கலந்து வைக்க வேண்டும் .
2. துருவிய தேங்காய், சீரகம், முந்திரி, பச்சை மிளகாய், ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும் .
3. அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உடைத்த உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளித்து, பிறகு கறிவேப்பிலை, வரமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், வெந்தயத்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் .
4. பிறகு இதனுடன் ஏற்கனவே அரைத்த கலவையையும், தயிர் கலவையையும் சேர்த்து வேக விடவும் , கொதி வரும் முன் இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.சுவையான மோர் குழம்பு தயார் .
|