ஆவிகளுடன் பேசி உங்கள் குறைகளைத் தீர்த்து வைக்கிறோம் என்று பலர் ஆங்காங்கே முளைத்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், உண்மையில் ஆவிகளுடன் பேச முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு வர முடியும். இதை சத்குருவிடம் கேட்ட போது…
ஆவிகளுடன் பேச முடியுமா?
சத்குரு:
ஆவிகளுடன் பேச முடியுமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆவிகளுடன் பேசுவது அவசியமா என்று முதலில் பாருங்கள். ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்றால் என்ன அர்த்தம்? உங்களிடமிருந்தும் இந்த உலகத்திடமிருந்தும் அவர் விடுதலையாகிப் போய் விட்டார் என்று தானே அர்த்தம். போனவரோடு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? பலரும் உயிரோடு இருக்கும்போது அவர்கள் முகத்தைக் கூட பார்ப்பதில்லை. அவர்களோடு பேசுவதில்லை. போனபிறகு அவர்களிடம் பேசுவதால் ஏதாவது பயனுண்டா என்ன?
பலபேர், தங்கள் பக்கத்து வீட்டுக்காரரோடு பேச மாட்டார்கள். வீட்டில் இருப்பவர்களோடு கூட பேசமாட்டார்கள். ஆனால் ஆவிகளிடம் பேசுவதில் ஆர்வம் வருகிறது. சக மனிதர்களிடம் அன்பாக பேசிப் பழகினாலே போதும். ஆவிகளோடு பேச்சு வார்த்தை அவசியமில்லை.
|