LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

பகவத்கீதையை சாட்சியாக வைத்துப் பதவியேற்ற கனடா அமைச்சர் அனிதா ஆனந்த்

 

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த் பகவத்கீதையை சாட்சியாக வைத்துப் பதவியேற்றுக்கொண்டார்.

அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த மெலனீ ஜோலி, தொழிற்துறை அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டார். இதனைத்தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த்துக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

கனடா பிரதமர் மார்க் கார்னேவுடன் சேர்ந்து, வளமான, பாதுகாப்பான நாட்டை கட்டமைக்கக் காத்திருப்பதாக அனிதா தெரிவித்தார். இவர் முன்னதாக அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அரசியலிலிருந்து விலக உள்ளதாக அவர் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில், மார்க் கார்னேயின் அறிவுறுத்தலால் அவர் மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மருத்துவத் தம்பதிகளான பஞ்சாப்பைச் சேர்ந்த சரோஜ் டி.ராம்,  தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.வி.ஆனந்த்  ஆகியோரின் மகளான அனிதா ஆனந்த்.1967-ல் பிறந்தார்.  குயின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முறையே அரசியல் ஆய்வுகள் மற்றும் நீதித்துறையில் இரண்டு இளங்கலை கலைப் பட்டங்களைப் பெற்றிருக்கிறார்.

டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் பட்டமும், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பாடத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். 2019 வரை பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல பதவிகளில் இருந்திருக்கிறார்.

லிபரல் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு தொடர்ந்து அரசியலில் கவனம் செலுத்திவந்தார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். கனடாவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்ற முதல் இந்துப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 2021-ம் ஆண்டில், கனடாவின் பாதுகாப்பு அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். கனடாவின் வரலாற்றில் இரண்டாவது பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றார். ஜூலை 2023 வரை இந்தப் பொறுப்பில் இருந்தார். ஜூலை 2023 முதல் டிசம்பர் 2024 வரை கருவூல வாரியச் செயலகத்தின் தலைவராகவும், பின்னர் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றினார்.

எப்போதும் ஒரு கனடியன் என்பதில் பெருமை கொள்ளும் அனிதா ஆனந்த வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்திய - பஞ்சாப் கலாச்சாரத்தைப் பின்பற்றிவந்தார். இந்து மற்றும் சீக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். தீபாவளி விருந்துகளை நடத்துகிறார். இந்தியாவின் சுதந்திர தினத்தைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்.

தன் செயல்பாடுகளுக்கு விளக்கமளிக்கும் விதமாக, ``நான் ஒரு கனடியன், என்னுடைய பஞ்சாபி மற்றும் தமிழ் பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
by hemavathi   on 15 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள்  -முனைவர்.சுபாஷினி இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள் -முனைவர்.சுபாஷினி
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.