குட்டிபுலி படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்திருக்கும் படம் கொம்பன்.
இந்த படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து, லட்சுமி மேனன், ராஜ்கிரண், கோவை சரளா, தம்பி ராமையா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
கிராமத்து மாமன் , மருமகன் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்திற்கு தடை கேட்டு முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது,
கொம்பன் படம் முதுகுளத்தூர் கலவர சம்பவத்தை பின்னனியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தியாகி பேரையூர் வேலுச்சாமி நாடாரை கலங்கப்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் தெரிகிறது.
படத்தின் பெயரான கொம்பன் என்ற தலைப்பே சண்டையைத் துண்டுவதாக இருக்கிறது . கடந்த ஆறு மாதங்களாக தமிழகத்தில் சாதி கலவரங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்த படம் வெளியானால் மேலும் இந்த கலவரங்கள் அதிகரிக்கும். என கூறி படத்திற்கு தடை கேட்டு முதல்வரிடம் மனு கொடுத்துள்ளார் தமிழ் நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ்.
ஆக.. இதனால் கொம்பன் ரிலீஸ் தள்ளிபோகுமா.. அல்லது சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியாகுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
|