LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

காவிரி குறித்த உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் முக்கிய தகவல்கள்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான இறுதித்தீர்ப்பில், தமிழகத்திற்கான நீரின் அளவை குறைத்திருப்பது ஏமாற்றமளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மாநிலத்திற்கு சாதகமான பல அம்சங்களும் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் முக்கிய தகவல்கள்:

  • நடுவர் மன்றம் ஒதுக்கிய 192 டிஎம்சி-யை விட தற்போதைய தீர்ப்பின் படி ஒதுக்கப்பட்டுள்ள தண்ணீரின் பங்கீட்டு அளவு குறைவானதாகும். நடுவர் மன்றம் ஒதுக்கிய நீரில் இருந்து 14 புள்ளி ஏழு ஐந்து டி.எம்.சி நீர் குறைக்கப்படுவதாக கூறிய உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கான ஒதுக்கீட்டு அளவான 177 புள்ளி இரண்டு ஐந்து டிஎம்சி தண்ணீரை ஒவ்வொரு ஆண்டும் தடையின்றி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

 

  •  உச்சநீதிமன்ற தீர்ப்பால் காவிரியில் 284.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கிடைக்கும். கேரளாவிற்கு 30 டிஎம்சி நீரும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரும் என்ற நடுவர்மன்ற தீர்ப்பில் மாற்றமில்லை.

 

  • நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக செயல்திட்டத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான 6 வார காலக்கெடு எக்காரணத்தைக் கொண்டும் நீட்டிக்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது,

 

  • இதே போன்று பன்மாநிலங்கள் வழியாக பாயும் நதிகள் தேசியச் சொத்து என்பதையும், எந்த ஒருமாநிலமும் இதில் தனி உரிமை கோர இயலாது என்பதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

  • காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான 1892 மற்றும் 1924ம் ஆண்டின் ஒப்பந்தங்கள் செல்லாது என்ற கர்நாடகத்தின் வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை .

 

  • இதே போன்று காவிரி வடிநிலப் பகுதிகளில் நீர்ப்பாசன பரப்பை 24.708 லட்சம் ஏக்கரிலிருந்து 21 லட்சம் ஏக்கராக குறைக்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் வாதமும் ஏற்கப்படவில்லை.

 

  • வரும் 15 ஆண்டுகளுக்கு மாதாந்திர வாரியாக தமிழ்நாட்டிற்கு நீர் வழங்கப்பட வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

  • டெல்டா பகுதியில் உள்ள நிலத்தடி நீரை பாசன உபயோகத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்த நிலையில், இதற்கு மாறாக உச்சநீதிமன்ற தீர்ப்பில் நிலத்தடி நீர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது தமிழகத்திற்கு பாதகமாக அமைந்துள்ளது. டெல்டா பகுதியில் நிலத்தடி நீர் 10 டி.எம்.சி. இருப்பதை கணக்கில் கொண்டு காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பில் 205 டி.எம்.சி. என்றும், இறுதி தீர்ப்பில் 192 டி.எம்.சி.யிலிருந்தும் தற்போது 14.75 டி.எம்.சி. நீரை குறைத்திருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது நியாயமானதல்ல.

 

  • தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை 192 டிஎம்சியிலிருந்து 177.25 டிஎம்சியாக குறைத்திருப்பது  தமிழகத்திற்கு பாதகமாக அமைந்துள்ளது.

 

  • நடுவர் மன்றத் தீர்ப்பில் இருந்த சில பிழைகள் இந்த தீர்ப்பில் சரிசெய்யப்பட்டுள்ளன.

 

  • 1892, 1924 ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும். அதன்படி, தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என ஒப்பந்தத்தில் உள்ளது.

 

  • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகின்றன.

 

  • இறுதிதீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது.

 

  • தீர்ப்பின்படி மாதாந்திர அடிப்படையில் தண்ணீரை திறந்தவிட வேண்டும்.  

 

  •  தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 டிஎம்சிக்கு கீழே செல்லும் போது தமிழகம் கூடுதலாக 10 டிஎம்சி கன அடி தண்ணீர் பெற சுப்ரீம்கோர்ட் அனுமதியளித்துள்ளது.

 

by Swathi   on 17 Feb 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு.. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு..
650 நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் கேரள விவசாயிக்குப் பத்மஸ்ரீ விருது 650 நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் கேரள விவசாயிக்குப் பத்மஸ்ரீ விருது
உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு
இந்தியாவில் முதன் முதலாக வயல்களில் சென்சார் மற்றும் ரேடர்கள் மூலமாக நடைபெற்ற நோய்க் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி. இந்தியாவில் முதன் முதலாக வயல்களில் சென்சார் மற்றும் ரேடர்கள் மூலமாக நடைபெற்ற நோய்க் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி.
3 மடங்கு லாபம் ஈட்டும் பிலிப்பைன்ஸ் விவசாயிகள்: நேரில் பார்வையிட்ட உடுமலை விவசாயிகள் தகவல் 3 மடங்கு லாபம் ஈட்டும் பிலிப்பைன்ஸ் விவசாயிகள்: நேரில் பார்வையிட்ட உடுமலை விவசாயிகள் தகவல்
நேரடியாக_உழவர்களிடம்_வாங்கிடுங்கள்... நேரடியாக_உழவர்களிடம்_வாங்கிடுங்கள்...
விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள் விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள்
தமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது? என்ன தீர்வு ? தமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது? என்ன தீர்வு ?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.