மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உள்பட 45 பேர் குற்றவாளிகள் என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து. இதையடுத்து அவர்கள் மீதான தண்டனை விவரம் அக். 3-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. லாலு பிரசாத் யாதவின் எம்.பி. பதவி பறிபோவது உறுதியாகியதோடு மட்டுமல்லாமல், தற்போது அவர் பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1990 ஆம் ஆண்டு லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது, போலி ரசீதுகள் தாக்கல் செய்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் அளவிற்கு கால்நடை தீவனத்தில் ஊழல் செய்ததாக லாலு பிரசாத் உள்ளிட்ட 45 பேர் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று லாலு உள்பட 45 பேர் குற்றவாளி என அறிவித்தது.தண்டனை விபரங்கள் வரும் 3 ந்தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், லாலு பிரசாத் ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி. எம்.எல்.ஏக்களின் பதவி நீக்கத்திற்கு எதிரான அவசரச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறாத நிலையில் இந்த தீர்ப்பு தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
|