|
||||||||
அலைப்பேசியில் ஆரோக்கிய எச்சரிக்கை வாசகம்- ஸ்பெயின் முடிவு |
||||||||
ஸ்பெயின் நாட்டில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு அலைப்பேசியிலும் ஆரோக்கிய எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
அலைப்பேசி, மனநலன், உடல்நலன், தூக்கம், உறவு முறை என அனைத்தையும் வயது வித்தியாசமின்றிப் பாழ்படுத்துகிறது. இதைக் கருத்தில் எடுத்து கொண்ட ஐரோப்பியத் தேசமான ஸ்பெயின் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. அதாவது சிகரெட்டைப் போலவே அலைப்பேசியிலும் ஆரோக்கிய எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்ய முடிவு செய்துள்ளது.
இது அலைப்பேசி அடிமைத்தனத்தைக் குறைப்பது போன்ற விழிப்புணர்வை அலைப்பேசி பயனர்கள் மத்தியில் ஏற்படுத்தும் என ஸ்பெயின் நம்புகிறது. ஸ்பெயின் அரசு நியமித்த வல்லுநர் குழு தாக்கல் செய்துள்ள 250 பக்க ஆய்வறிக்கையில் இது முன்மொழியப்பட்டுள்ளது.
இதில் டிஜிட்டல் சாதனங்களைக் குழந்தைகள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது சார்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில் சிகரெட் பிடிப்பதால் கோடிக் கணக்கிலான மக்கள் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர். அதனைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு நாடுகளின் அரசுகள் சிகரெட் உட்படப் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் அந்தப் பொருட்களில் படங்கள் மற்றும் வாசகங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றன. அதே போல அலைப்பேசி சார்ந்தும்
ஸ்பெயின் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
|
||||||||
by hemavathi on 06 Dec 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|