LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மத்திய அரசு துறைகளில் 4.12 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மக்களவையில் தகவல்!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில்  4.12 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மக்களவையில்  தெரிவிக்கப்பட்டது.

மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக  அளித்த பதில்:

கடந்த 2016, 2017 மற்றும் 2018 ம் ஆண்டுகளில் 4,123 மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக 1,767 ஊழல் வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இவற்றில் 900  வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 59 வழக்குகளில் துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

89 வழக்குகள்  முடித்து வைக்கப்பட்டுள்ளது. 900 வழக்குகளில் 19 வழக்குகள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. 9 வழக்குகளில் குற்றவாளிகள் இல்லையென  தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.  ஊழலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

இதேபோல், மற்றொரு கேள்விக்கு எழுத்து மூலமாக பதிலளித்த ஜிதேந்திர சிங், ‘மத்திய அரசின் பல்வேறு துறைகளில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 4.12 லட்சம்  பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் 15,284 இடங்கள் குரூப் ஏ பணியிடங்கள். குரூப்-பி.யில் 77,050 பணியிடங்கள், குரூப் -சி பிரிவில் 3 லட்சத்து 21  ஆயிரத்து 418 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை சம்பந்தப்பட்ட அமைச்சகம், துறைகளால் தகுதி தேர்வு நடத்தப்பட்டு விதிமுறைகளின்படி நிரப்பப்படும்’  என்று குறிப்பிட்டு உள்ளார். 

by Mani Bharathi   on 15 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.