நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்திருந்தது. இதனை அடுத்து என்.எல்.சி தொழிற்சங்கங்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. மேலும் என்.எல்.சியின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு விற்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பங்கு பரிவர்த்தனை மையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிக அரசுக்கு 5 சதவீத பங்குகளை விற்க பரிசீலனை மேற்கொள்ளப்படும் எனவும், என்.எல்.சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
|