LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தனது 99 வயதிலும் தடகளத்தில் கலக்கும் பஞ்சாப் பாட்டி !!

பஞ்சாப் தலைநகர், சண்டிகரை சேர்ந்த, மன் கவுர் என்ற 99 வயது பாட்டி அமெரிக்காவில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று, சாதனை படைத்துள்ளார். 


ஓட்டப்பந்தயம் போன்ற தடகள விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்ட மன் கவுர். நம் நாட்டில், நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில், முதியோருக்கு நடத்தப்படும், தடகள போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்கள், விருதுகளை வாரி குவித்துள்ளார்.


சமீபத்தில், அமெரிக்காவில் பெற்ற விருதுடன், நாடு திரும்பிய அவர், பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது, 


நான் தினமும், அதிகாலை, 3:00 மணிக்கு எழுந்து, வீடு அருகே உள்ள பூங்காவில், 400 மீட்டர் ஓடுவேன்; பின், யோகா செய்வேன். எண்ணெய், நெய் போன்றவற்றை உணவில் சேர்ப்பதில்லை; தினமும், அதிக அளவில் பழச்சாறுகளை குடிப்பேன்; நானே தயாரிக்கும் உணவை, இரண்டு முறை எடுத்துக்கொள்வேன்.


கடந்த ஆண்டு, கனடாவில் நடந்த ஓட்டப்பந்தயம் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில், ஐந்து தங்கம், அமெரிக்காவில் நடந்த உலக தொடர் விளையாட்டுப் போட்டிகளில், ஐந்து தங்கம், 2011ல் அமெரிக்காவில் நடந்த சர்வதேச தடகள போட்டிகளில், 'அதலெட் ஆப் தி இயர்' விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளேன் என மன் கவுர் தெரிவித்துள்ளார்.


சாதனை செய்வதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் இந்த மூதாட்டி.

by Swathi   on 21 Feb 2014  1 Comments
Tags: 96 year old Women   Mann Kaur   Athletics   99 வயது பாட்டி   மான் கவுர்   சண்டிகர் பாட்டி   தடகளம்  
 தொடர்புடையவை-Related Articles
தனது 99 வயதிலும் தடகளத்தில் கலக்கும் பஞ்சாப் பாட்டி !! தனது 99 வயதிலும் தடகளத்தில் கலக்கும் பஞ்சாப் பாட்டி !!
கருத்துகள்
27-Feb-2014 12:06:57 தனம் said : Report Abuse
valzha valamudan
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.