LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வளைகுடா நாடுகள்

சென்னைப் பொறியாளருக்கு ஐக்கிய அரபு அமீரக பரிசுச்சீட்டில் ரூ.230 கோடி பரிசு

 

சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளருக்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடந்த பரிசுச்சீட்டில் சுமார் ரூ.230 கோடி பரிசு கிடைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) நாட்டில் டைகெரோஸ் நிறுவனம் அமீரகம் டிரா என்ற பரிசுச்சீட்டை நடத்தி வருகிறது. அண்மையில் நடைபெற்ற மெகா 7 விளையாட்டு என்ற பரிசுச்சீட்டு குலுக்கலை இந்த நிறுவனம் நடத்தியது. இதில் சென்னையைச் சேர்ந்த, பொறியாளரான ஸ்ரீராம் ராஜகோபாலன் கலந்துகொண்டு முதல் பரிசான சுமார் ரூ.230 கோடியை (2.7 கோடி அமெரிக்க டாலர்கள்) வென்றுள்ளார். இது இணையத்தில்  விளையாடும் பரிசுச்சீட்டு விளையாட்டாகும்

சென்னையைச் சேர்ந்த இவர் சவுதி அரேபியாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி நடந்த பரிசுச்சீட்டில் கலந்துகொண்டபோதுதான் இவருக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீராம் ராஜகோபாலன் கூறும்போது, "எனக்கு பரிசுச்சீட்டில் இவ்வளவு பரிசு கிடைத்துள்ளது என்று கூறியபோது நான் முதலில் நம்பவில்லை. இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது பயம் கலந்த சந்தோஷத்தைத் தருகிறது.

இது ஒரு பெரிய தொகை. இதற்கு முன்பு இதுபோன்ற பரிசை நான் பெற்றதில்லை. இந்த வெற்றி எனக்கு மட்டுமல்ல; இது என் குடும்பம், என் குழந்தைகள் மற்றும் படிக்கும் அனைவருக்கும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு தந்தையும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கனவு காண்கின்றனர். இப்போது தலைமுறை தலைமுறையாகச் செல்வத்தை உருவாக்க இது வாய்ப்பாக அமைந்துள்ளது” என்றார்.

எளிமையான, நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்த ஸ்ரீராம், 1998-ல் சவுதி அரேபியாவுக்குக் குடிபெயர்ந்தார். அங்கே தனது மனைவி, இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். ஓய்வு பெற்ற நிலையில் அண்மையில் சென்னைக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

by hemavathi   on 25 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா
82 ஆண்டுகளுக்குப் பின் நூலகத்தை வந்தடைந்த புத்தகம் 82 ஆண்டுகளுக்குப் பின் நூலகத்தை வந்தடைந்த புத்தகம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.