|
|||||
சென்னை- வட மாவட்டங்களில் 3 நாள் கனமழை பெய்யும்- வானிலை மையம் தகவல்! |
|||||
இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளதால் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. இந்த நிலையில், கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான கஜா புயல், 15ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இந்த புயல், தாக்குதலால் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தநிலையில், கடந்த 18ம் தேதி இலங்கைக்கு தென் கிழக்கே காற்றழுத்தம் ஒன்று உருவானது. இந்த காற்றழுத்தம், வட மேற்கு திசையில் நகர்ந்து காவிரி டெல்டா பகுதியை நெருங்கியது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்தது. அந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்தது. இதன் கரணமாக புதுச்சேரி மற்றும் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரவு தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டியது. காற்றழுத்தம் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று சென்னை மற்றும் தெற்கு ஆந்திர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்யத் தொடங்கி மாலையிலும் நீடித்தது. பிற்பகலுக்குப் பின்னர் இரவு வ இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மாலை தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். இது தவிர உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. விடியவிடிய: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக எழும்பூர், மயிலாப்பூர், ராயப்பேட்டை, சாந்ேதாம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர், வில்லிவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட நகரின் உட்பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதேபோன்று புறநகர் பகுதிகளான தரமணி, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்தது. நேற்று அரசு விடுமுறை தினம் என்பதால் பல்வேறு இடங்களுக்கு செல்ல திட்டமிருந்த பொது மக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். இதனால் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரீனா கடற்கரை,கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம் கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மழையின் போது காற்று வேகமாக வீசியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சியில் மொத்த 22 இடங்களில் மிதமான நீர் தேங்கியது. இதை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக வெளியேற்றினர். இதைத் தவிர்த்து 4 மரங்களும் விழுந்தன. இவைகளும் உடனடியாக அகற்றப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை விமான நிலையப் பகுதிகயில் 5 செ.மீ மழையும், செம்பரம்பாக்கம், மகாபலிபுரம் பகுதிகளில் 4 செ.மீ மழையும், பூந்தமல்லி,தாம்பரம், செங்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளில் 3 செ.மி மழையும் பதிவாகி உள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என 3 மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்துள்ளனர். சென்னை பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி, சீர்மிகு சட்டக்கல்லூரி ஆகியவற்றில் இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மாலை தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது |
|||||
by Mani Bharathi on 22 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|