LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னை- கொல்லம் தினசரி ரயில் சேவை 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது!

சென்னை - கொல்லம் தினசரி ரயில் சேவை 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.
செங்கோட்டை - புனலூர் மீட்டர்கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2010ம் ஆண்டு செங்கோட்டை வழியாக தமிழக -கேரள  ரயில் போக்குவரத்தை  ரயில்வே துறை நிறுத்தியது.  49.3 கிமீ தூரமுள்ள இந்த அகல ரயில் பாதை பணிகள் ரூ.456  கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன்  9-ம் தேதி இந்த ரயில் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. கடந்த 8 மாத காலமாக செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு, வாரத்திற்கு ஒரே ஒரு ரயில் மட்டுமே இவ்வழியாக இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து கொல்லத்திற்கு செங்கோட்டை வழியாக மீண்டும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு செங்கோட்டை வந்த இந்த ரயிலை பொதுமக்களும் பயணிகளும், வியாபாரிகளும், வர்த்தக சங்கத்தினரும் வரவேற்றனர். செங்கோட்டையில் இருந்து 5.20க்கு புறப்பட்டு கொல்லத்துக்கு காலை 8.45 மணிக்கு சென்றது.

இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படுகிறது.  இந்த ரயிலில் ஏசி வசதி கொண்ட பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் 8, பொது பெட்டிகள் 2 என மொத்தம் 12 பெட்டிகள் உள்ளன.

மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து 16102 என்ற எண்ணுடன் காலை 11.45 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு மாலை 3.10 மணிக்கு வந்த ரயிலுக்கு செங்கோட்டை வர்த்தக சங்கம் சார்பில்  வர்த்தக சங்கத் தலைவர் ரஹீம் ரயிலை இயக்கிய ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

இந்த ரயில், ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

by Mani Bharathi   on 07 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.