தமிழ் சினிமாவில் சரியான விநியோகஸ்தர்கள் கிடைக்காமல் இதுவரை சுமார் 460 படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கி கிடக்கின்றன.
இதனை இயக்குனர் சேரனின் நிறுவனமான சி2ஹெச் மூலம் வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.
சமீபத்தில், திருட்டு விசிடிகளுக்கு முடிவு கட்டும் பொருட்டு இயக்குனர் சேரன் சி2ஹெச் அதாவது சினிமா டூ ஹோம் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனத்தின் மூலம் திரைப்படங்கள் வெளியாகும் அன்றே நம் வீடுகளில் விசிடிக்கள் மூலம் புதிய திரைப்படங்களை நல்ல தரத்துடன் பார்த்து மகிழ முடியும். ஒரு சி.டி. விலை ரூ. 50 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனத்தின் மூலம் நாடு முழுவதும் விநியோகிஸ்தர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் முன்பதிவு செய்தால் படத்தின் சி.டி. வீடு தேடி வரும். இந்த திட்டம் மூலம் திருட்டு சி.டி.க்கள் ஒழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனம் வெளியிடும் முதல் படமாக சேரன் இயக்கிய ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம் பொங்கலை ஒட்டி.. சுமார் ஐம்பது லட்சம் வீடுகளில் வெளியாக இருக்கிறதாம்.
இதுபோல் ஜெய் படம் உள்பட மேலும் 50 படங்கள் இத்திட்டத்தின் மூலம் சி.டி.க்களாக வீடுகளில் அடுத்தடுத்து சப்ளை செய்யப்படுகின்றன. தணிக்கை செய்யப்பட்டு இதுவரை ரிலீசாகாமல் முடங்கி கிடக்கும் 460–க்கும் மேற்பட்ட சிறுபட்ஜெட் படங்களை இதுபோன்ற சி.டி.களாக வீடுகளில் நேரில் சப்ளை செய்யவும் முயற்சி நடக்கிறது.
|