|
|||||
சத்தீஸ்கர் இரும்பாலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய அரசு ரூ30 லட்சம் நிவாரணம்! |
|||||
சத்தீஸ்கரில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பாலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் பிலாய் நகரில் மாநில அரசுக்கு சொந்தமான இரும்பு ஆலை இயங்கி வருகிறது. இந்திய ரயில்வே துறைக்கு உலகத்தரம் வாய்ந்த ரயில் தண்டவாளங்களை தயாரித்து சப்ளை செய்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் பிலாய் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலை விரிவாக்கப் பட்டதுடன், நவீனமயமாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார். இந்த நிலையில், பிலாய் இரும்பாலையில், வழக்கமான உற்பத்திப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, ஆலையில் உள்ள காஸ் குழாயில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு பெரும் தீவிபத்து ஏற்பட்டது. ஆலைக்குள் தீ பரவியதும், அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு ஆலையை விட்டு வெளியேறினர். இருந்தும், தீயில் சிக்கி 12 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். மேலும் 14 பேர் பலத்த தீக்காயத்துடன் தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து, மாநில அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் பிலாய் ஆலை வெடி விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று உருக்குத்துறை மந்திரி பிரேந்தர் சிங் அறிவித்து உள்ளார். மேலும், இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றும் சிறிய அளவில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளார். |
|||||
by Mani Bharathi on 11 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|