LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சத்தீஸ்கர் இரும்பாலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய அரசு ரூ30 லட்சம் நிவாரணம்!

சத்தீஸ்கரில் அரசுக்கு சொந்தமான பிலாய் இரும்பாலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் பிலாய் நகரில் மாநில அரசுக்கு சொந்தமான இரும்பு ஆலை இயங்கி வருகிறது. இந்திய ரயில்வே துறைக்கு உலகத்தரம் வாய்ந்த ரயில் தண்டவாளங்களை தயாரித்து சப்ளை செய்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் பிலாய் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்த ஆலை விரிவாக்கப் பட்டதுடன், நவீனமயமாக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார். 

இந்த நிலையில், பிலாய் இரும்பாலையில், வழக்கமான உற்பத்திப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, ஆலையில் உள்ள காஸ் குழாயில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு பெரும் தீவிபத்து ஏற்பட்டது.

ஆலைக்குள் தீ பரவியதும்,  அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு ஆலையை விட்டு வெளியேறினர். இருந்தும், தீயில் சிக்கி 12 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். மேலும் 14 பேர் பலத்த தீக்காயத்துடன் தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவம் குறித்து, மாநில அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் பிலாய் ஆலை வெடி விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று உருக்குத்துறை மந்திரி பிரேந்தர் சிங் அறிவித்து உள்ளார்.

மேலும், இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றும் சிறிய அளவில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.

by Mani Bharathi   on 11 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.