தேவையானவை :
கோழி- அரை கிலோ வெங்காயம்-4 இஞ்சி விழுது- 2 டேபிள் ஸ்பூன் பூண்டு விழுது- 2 டேபிள் ஸ்பூன் காய்ந்தமிளகாய்- 8 பட்டை-2 சோம்பு- ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சததூள்- சிறிது எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் உப்பு-தேவைக்கேற்ப
செய்முறை :
1.கோழியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்,வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும்,
2.வாணலியில் எண் ணெயை சுடவைத்து பட்டை சோம்பை தாளிக்கவும்.
3.பின்பு காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, வெங்காயத்தையும் போட்டு வதக்கவும்,பிறகு அதில் மஞ்சத்தூள், இஞ்சி , பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்.
4.கோழித் துண்டுகளை போட்டு உப்பை சேர்த்து நன்கு கிளரவும்.அடுப்பை குறைத்து வைத்து கோழி வேகும் வரை சுருள வதக்கி இறக்கவும்.
|