LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கஜா புயல் பாதிப்பு நிவாரண உதவியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவியாக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். 

வங்கக்கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தில் கடந்த 16ம் தேதி அதிகாலை நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. அப்போது, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்று வீசியது.

 குறிப்பாக டெல்டா மாவட்டங்களில்  மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் தோட்டப்பயிர்களான தென்னை, வாழை, நெல், வெற்றிலை, பழ மரங்கள்  அனைத்தும் கடுமையாக சேதம் அடைந்தது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஹெலிகாப்டரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். மேலும், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் புயல் சேத விவரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு, முதல்வரிடம் வழங்கினர்.

புயல் சேதம் ஏற்பட்ட பகுதிகளுக்கு பிரதமரிடம்  நிவாரணம் கேட்டு பெறுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.

பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு நேராக  டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றார். அங்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் கஜா புயலினால் கடும் சேதம் அடைந்துள்ளது. அதற்கு தேவையான நிதியை பெறுவதற்காக பிரதமரை சந்தித்து, கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை அவருக்கு விளக்கி தெரிவித்து, சேத விவரங்கள் அடங்கிய மனுவை அவரிடத்திலே சமர்ப்பித்துள்ளேன். 

தற்காலிக சீரமைப்புக்காக உடனடியாக 1500 கோடி மத்திய அரசு வழங்க வேண்டுமென்று பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன். நிரந்தர சீரமைப்புக்காக 15,000 கோடி மத்திய அரசு வழங்க வேண்டுமென்றும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டு உள்ளேன். கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக மத்திய குழு பார்வையிட்டு சேத விவரங்களை கணக்கிட்டு நிவாரணத்தை அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். 

உடனடியாக மத்திய குழுவை அனுப்பி வைத்து, விரைவில் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட அனுப்பி வைப்பதாக பிரதமர் கூறியுள்ளார். தமிழக அரசு முதற்கட்டமாக 1000 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகளெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 12. 

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63, சேதம் அடைந்த குடிசை வீடுகள் 2,78, 824, ஓட்டு வீடுகள் 62,996, மொத்தம் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் 3,41,820. ஆடு, மாடுகள் 12,298, பறவைகள் 92,507 என கால்நடைகள் மொத்தம் 1,04,805 இறந்துள்ளது. சாலையோர மரங்கள் 11,32,686 கீழே விழுந்துள்ளது. இதுவரை 7,27,399 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. 556 மீட்பு முகாம்களில் 3,78,019 பேர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சாய்ந்த, ஒடிந்த மின்கம்பங்கள் 1,03,508, இதில் 40 சதவீதம் சீரமைக்கப்பட்டுவிட்டன. 886 மின்மாற்றிகள் வீழ்ந்து சேதமடைந்துள்ளன, இதில் 40 சதவீதம் த சீரமைக்கப்பட்டுவிட்டன. பழுதடைந்த துணை மின் நிலையங்கள் 181,  இதுவரை 147 துணை மின் நிலையங்கள் சீரமைப்பட்டு உள்ளன. துண்டிக்கப்பட்ட மின்இணைப்புகள் 53,21,506, இதுவரை, இதில் 40,04,452 சீரமைக்கப்பட்டு உள்ளன. 

சீரமைக்கின்ற பணிகளில் மின்துறை பணியாளர்கள் 22163 பேர் ஈடுபட்டுள்ளனர். பகுதி சேதமடைந்த படகுகள் 2625, முழுவதுமாக சேதமடைந்த படகுகள் 1419, சேதம் அடைந்த வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் 88,102 ஹெக்டேர், 30,000 ஹெக்டேர் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, 32,706 ஹெக்டேர் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 175 தென்னை மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு 1,92,500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

தென்னை மறுசாகுபடி செய்வதற்கு ஒரு ஹெக்டேருக்கு 72,100 வழங்கப்படும். சொட்டுநீர் பாசனத்திற்கு சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும்.

நெற்பயிர் சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 வழங்கப்படும். கரும்பு, வாழை, காய்கறிகள் மற்றும் மரங்கள் போன்ற பாசன பயிர் சேதங்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 வழங்கப்படும்.

முழுவதும் சேதடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 42,000, பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு 20,000, முழுவதும் சேதமடைந்த பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு 85,000, பகுதி சேதமடைந்த பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு 30,000, முழுவதும் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு 5,00,000, பகுதி சேதமடைந்த விசை படகுகளுக்கு 3,00,000, வலைகள் மட்டுமே சேதமடைந்திருந்தால் 10,000, என்ஜின் பழுதுநீக்கம் செய்ய 5,000 வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

by Mani Bharathi   on 25 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.