LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- இந்திய சாதனைத் தமிழர்கள்

ஏரிகளைச் சீரமைத்து வரும் இளைஞர் நிமல் ராகவனுக்கு முதலமைச்சர் பாராட்டு

ஏரிகளைச் சீரமைத்து வரும் இளைஞர் நிமல் ராகவனுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த நாடியம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிமல் ராகவன். நீர்த் தேவையும் அதனை உருவாக்கி சிக்கனமாகப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் கற்றறிந்து ஏரிகளைப் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் நிமல் ராகவன். இந்நிலையில் இளம் வயதிலேயே பொதுச் சிந்தனையுடன் ஏரிகளைச் சீரமைத்து வரும் நிமலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; "இளம் வயதிலேயே பொதுச் சிந்தனையுடன் ஏரிகளைச் சீரமைத்து வரும் நிமல் ராகவனுக்கு பாராட்டுகள். எடுத்துக்காட்டெனச் செயல்பட்டு இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் அவருக்கு வாழ்த்துகள். நீர்நிலைகளைத் தூர்வாருதல் – பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் என்பது நீர்மேலாண்மையில் முக்கியமானது. தற்போது கூட நமது அரசின் சார்பில் 2,473 ஏரிகள், 344 அணைக்கட்டுகள், 4,879 கி.மீ வரத்துக் கால்வாய்கள், கால்வாய்கள் / ஆறுகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீர்நிலைப் பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டுவதைப் பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும். நம்முடைய இளைஞர்களும் – தன்னார்வலர்களும் – சூழலியல் அமைப்புகளும் நிமல் ராகவன் போன்று தத்தமது பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைச் சீரமைத்திட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

by hemavathi   on 01 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தகைசால் தமிழர் குமரி அனந்தன் மறைவுக்குப்  புகழ் வணக்கம்  - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி தகைசால் தமிழர் குமரி அனந்தன் மறைவுக்குப் புகழ் வணக்கம் - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
இளையராஜா அவர்களின் சிம்பொனி 2025 இசைக்கோர்வை அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள்! இளையராஜா அவர்களின் சிம்பொனி 2025 இசைக்கோர்வை அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள்!
மேற்கு வங்கத்தில் ஆட்சிப்பணி அதிகாரியாகிச் சாதித்த திண்டுக்கல் தமிழ் ஓவியா மேற்கு வங்கத்தில் ஆட்சிப்பணி அதிகாரியாகிச் சாதித்த திண்டுக்கல் தமிழ் ஓவியா
சென்னையில் பிறந்த பெண்ணுக்கு  கிராமி விருது சென்னையில் பிறந்த பெண்ணுக்கு கிராமி விருது
புதுச்சேரி தவில் இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது புதுச்சேரி தவில் இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.