|
|||||
வின்பாஸ்ட் மின்கல வாகன விற்பனையைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் |
|||||
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் மின்சார வாகன உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற்றது. வின்பாஸ்ட் ஆசியாவின் தலைமை செயல் அதிகாரி ஃபாம் சான் சாவ் தலைமை வகித்தார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, பெ.கீதா ஜீவன், அனிதா ஆர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாகன தொழிற்சாலையைத் திறந்து வைத்து, முதல் வாகன விற்பனையைத் தொடங்கி வைத்தார். மேலும், ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் மின்சார வாகனத்தில் கையெழுத்திட்டு அதன் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மின்கல வாகனத்தில் பயணித்து ஆலையைச் சுற்றிப் பார்த்தார். மேலும், தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் திறன் மேம்பாடு பயிற்சி பெற்ற 229 பட்டயம் படித்த மாணவர்களுக்கான பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
விழாவில் பேசிய முதல்வர் “தமிழக வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் அடிக்கல் நாட்டப்பட்டு 17 மாதங்களில் தனது உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.
இதற்காக அந்நிறுவனத்திற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு இந்தப் பெருமையில் முக்கிய பங்கு உண்டு. டி.ஆர்.பி.ராஜாவின் உழைப்புக்கு இந்த வின்பாஸ்ட் ஒரு சாட்சியாக உள்ளது. இ-வாகனங்கள் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கக்கூடிய வின்ஃபாஸ்ட், தமிழ்நாடு மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைக்குத் தமிழ்நாட்டு முதல்வராக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் மொத்த மின் வாகன உற்பத்தியில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் தான் உற்பத்தி ஆகிறது. தமிழ்நாடு தான் இந்தியாவின் வாகன உற்பத்தியில் மற்றும் மின் வாகன உற்பத்தியின் கேப்பிட்டல் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்வேன்.
சென்னை தான் இந்தியாவின் டெட்ராய்ட்.
தற்போது தூத்துக்குடியில் முதல் மின் வாகன உற்பத்தித் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கும், வியட்நாமுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மேம்படும். நான் உறுதியோடு சொல்கிறேன், இந்நாள் தென் மாவட்டத்தின் ஒரு பொன் நாள்..."என்றார்.
|
|||||
| by hemavathi on 05 Aug 2025 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|