|
||||||||
வெளிநாட்டினருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை இல்லை : டிரம்ப் முடிவு |
||||||||
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று உள்ள டிரம்ப் வருகிற ஜனவரி 20-ஆம்தேதி பதவியேற்கிறார். இதற்கிடையே தனது 2-ஆவது முறை ஆட்சியில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாகச் சட்ட விரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் வெளிநாட்டினருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டத்தை நீக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அரசியலமைப்பின் 14-ஆவது திருத்தத்தின் படி, பெற்றோரின் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல், அதன் எல்லைக்குள் பிறந்த குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்குகிறது.
இந்த 150 ஆண்டு காலச் சட்டத்தை மாற்றியமைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதேவேளை அதைச் செயல்படுத்துவது என்பது டிரம்ப்புக்குக் கடினமாக இருக்கும். ஏற்கனவே டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், "இச்சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இந்த அமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
அமெரிக்கக் குடிமகனாக மாறுவதற்குக் கடுமையான தரநிலைகள் இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். டிரம்ப்பின் இந்த முடிவால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.
|
||||||||
by hemavathi on 11 Dec 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|