குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பாதிப்பிலிருந்து மெல்ல வெளி வர ஆரம்பித்திருக்கிறது இந்தியா. இந்நிலையில் 'டெல்டா + 'என்ற வகை கொரோனா வைரஸினால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள்.
மக்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தடுப்பூசிகள் அனைவருக்கும் போடப்படுவதற்கான முயற்சிகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் எனும் போது அவர்களை நோய் பாதிப்பிலிருந்து காக்க தடுப்பூசி சோதனைகள் நம் நாட்டில் அரசின் முயற்சியோடு ஆரம்பிக்கப்பட்டன.
ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்துள்ளது. இரண்டு கட்ட சோதனை முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன.மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவடைந்தபின் கோவாக்சின் தடுப்பூசி 2 முதல் 17 வயது குழந்தைகளுக்கு செப்டம்பர் மாதத்திலிருந்து போடப்படும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரஞ்சித் குலேரியா கூறியிருக்கிறார். பரிசோதனை முடிவடைந்த பின் மத்திய அரசின் அனுமதியோடு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
|