|
|||||
ஒரு குழந்தைக்கு மேல் பெற்றவர்களிடம் இருந்து ரூ.16,740 கோடி அபராதம் வசூல் !!! |
|||||
சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றவர்களிடம் இருந்து ரூ.16,740 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை திட்டம் :
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, சீன அரசு ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளும் தம்பதியினருக்கு, ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை அபராதமாக விதித்து வருகிறது. இதனால் சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் கணிசமாக குறைந்துள்ளது.
இந்நிலையில், சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வூ யூசூ என்பவர், சீனாவில் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த அரசுகள் ஒரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் தம்பதியினரிடம் இருந்து பெறப்பட்ட அபராத தொகையை தங்களுடைய செலவினத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது பற்றி தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: சீனாவில் ஒவ்வொரு மாகாண அரசிடமும், கடந்த ஆண்டு குடும்பக் கட்டுப்பாட்டை மீறியதற்காக பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை குறித்த விவரத்தை தருமாறு கடந்த ஜூலை 31ம் தேதி கடிதம் எழுதியிருந்தேன். எனக்கு கிடைத்த தகவலின்படி 19 மாகாண அரசுகள், கடந்த ஆண்டில் ரூ.16,740 கோடியை அபராதத் தொகையாக வசூலித்துள்ளன. 12 மாகாண அரசுகள் பதில் தெரிவிக்கவில்லை, அபராத வசூலில் ஜியாங்ஷி மாகாணம் தான் முதலிடத்தில் உள்ளதாகவும், இந்த மாகாணத்தில் மட்டும் ரூ.343 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். |
|||||
by Swathi on 30 Sep 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|