LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

3-வது விமானம் தாங்கி போர்க்கப்பல் சீனா தயாரிக்கும் தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி!

சீனா, தனது  3 வது விமானம் தாங்கி போர்க்கப்பலை தயாரித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சீன கடற்படையில் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல்  லியோனிங். இது சோவியத் யூனியன் காலத்தில் கட்டப்பட்டது. இயந்திரங்கள் அகற்றப்பட்ட நிலையில் 1998ம் ஆண்டு சீனாவிற்கு இந்த கப்பல் விற்கப்பட்டது.

இதனை வாங்கி புதுப்பித்த சீனா லியோனிங் என பெயரிட்டு 2012ல்  தனது கடற்படையில் இணைத்தது. தொடர்ந்து தனது கடற்படையை அதிநவீனமாக்கி வலுப்படுத்தவும் தென் சீனக்கடலில் ஆதிக்கம் செலுத்தவும் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டாவது விமானம்  தாங்கி போர்க்கப்பலை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரித்தது.

மேலும் டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து விமானம் தாங்கி கப்பல் கடந்த மே மாதம் கடலில் பயணத்தை தொடங்கியது. இதற்கு இன்னும் பெயர்  இடப்படவில்லை. வருகிற 2020ம் ஆண்டு கடற்படையில் இது இணைக்கப்படும். 

இந்த நிலையில், சீனா தனது 3-வது விமானம் தாங்கி கப்பல் தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான  ஜின்ஹா தகவல் வௌியிட்டு உள்ளது. முதல் விமானம் தாங்கி கப்பல் சேர்க்கப்பட்டு 6வது ஆண்டை கொண்டாடும் அதே வேளையில் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலுக்கும் சீனா  அடித்தளம் இட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

by Mani Bharathi   on 29 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.