கடந்த ஏழு மாதங்களில், சீன ராணுவம் இந்திய எல்லை பகுதிக்குள் 150 முறை அத்துமீறி நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்டை நாடான சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே தெளிவான எல்லை இன்றுவரை வரையறுக்கப்படவில்லை. தற்காலிக எல்லை மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில், எவ்வித தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையினருடன் இணைந்து, இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது.இதை அறிந்த பிறகு, அந்தப் பகுதிகளில் இந்த ஆண்டில் மட்டும் 150 முறை சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து அங்கு காவலில் உள்ள இந்திய வீரர்களிடம், "இது எங்களுக்கு சொந்தமான பகுதி; அமைதியாக வெளியேறுங்கள்' என, பேனர்களை காட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது.கடைசியாக, 20ம் தேதி அத்துமீறிய சீன ராணுவ குதிரைப்படை வீரர்கள், நீண்ட நேரம் அங்கேயே இருந்து, சண்டைக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்; பிறகு, தானாக அங்கிருந்து சென்றனர்.
|