LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

சின்ன சின்ன ஆசை

அன்பு மலர்கள் மலர்ந்து

 

அமைதி நிலவ வேண்டும்

 

ஆன்மீக அன்பர்கள் கூடி

 

ஆன்ம பலம் பெற வேண்டும்

 

 

 

இன்னிசை  எழுப்பி புவியில்

 

இன்பம் பெற வேண்டும்

 

ஈன்றவளை தெய்வம்

 

என்று நினைக்க வேண்டும்

 

 

 

உண்மை தன்மையுணர்ந்து

 

வாழ்வில் உயர்வடைய வேண்டும்

 

ஊனம் கண்டாலும் நேயமுடன்

 

நல்லுறவோடு பழக வேண்டும்

 

 

 

எவ்வுயிரும் தன் உயிர்போல்

 

நினைக்கும் உள்ளம் வேண்டும்

 

ஏற்றமிகும் பாரதம் என

 

எங்கும் பேசப்பட வேண்டும்

 

 

 

ஐயம் தெளிவுபட நல்ல

 

கல்வி கற்க வேண்டும்

 

ஒற்றுமை எங்கும் நிலவி 

 

ஓரினமென நினைக்க வேண்டும்

 

 

 

ஒளவை மொழி அமுதமொழி

 

அனைவரும் உணர வேண்டும்

 

எ:.குபோல் வீரம் எங்கும்

 

உலகில் உறுதிபட வேண்டும்

 

 

 

உலகில்

 

அன்பு விதையைத்தூவி

 

பண்பு நீரைப் பாய்ச்சி

 

உழைப்பு உரமிட்டு

 

ஆன்மீக மனிதநேய

 

பயிரை வளர்த்தால்

 

அல்லவை தேய்ந்து உலகில்

 

நல்லவை பெருகும் !

 

 

 

பூ.. சுப்ரமணியன்,

 

பள்ளிக்கரணை   சென்னை

by Subramanian   on 09 Sep 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.