LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

சித்திரைப் பாவையே வருக! வரங்கள் தருக!! - பூ. சுப்ரமணியன்

எத்திசையும் அமைதி நிலவ

பங்குனித் தாய் பெற்றெடுத்த

சித்திரைப் பாவையே

சிறப்பான சிந்தனைகளை

சுமந்துகொண்டு வருக

முத்தான வரங்கள் தருக !

 

எல்லாரும் கொண்டாடும்

எங்கள் சித்திரைப் பாவையே

எம்மதம் சம்மதம் – உலகில்  

மனிதநேய மிக்க

மக்கள் சமுதாயம்

மலர வரம் தருக !

 

தன் மக்கள் நலம்

மனதில் கொள்ளாமல்

நாட்டு மக்கள் நலமே

மனதில் கொள்ளும்

அரசியல் தலைவர்கள்

உருவாக வரம் தருக !

 

பொன் நகை வேண்டாம்

புன்ன(ந)கையே போதும்

பாரதி பாடிய

புதுமைப் பெண்கள்

பெருக வரம் தருக !

 

புத்தன் ஏசு காந்தி

காட்டிய அன்பு வழியில்

சத்தியமாக நடக்கும்

நல்ல இதயங்கள்

நாட்டில் மலர வரம் தருக !

 

 

வரங்கள் தரும்

சித்திரைப் பாவையை

ஐவகை பழங்கள்

வண்ண மலர்களுடன்

நாம் அனைவரும்

வணங்கி வரவேற்போம் !

 

பூ. சுப்ரமணியன்,

பள்ளிக்கரணை, சென்னை

 

by Subramanian   on 12 Apr 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.