LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

சித்திரம் பேசுதடி

இறைவன், ஆண் பெண்                            

இருவர் உணர்வுகளை

 

இணைத்துப் படைத்தான்

 

பேசும் மனிதர்களாக...!

 

 

 

மனிதனோ வண்ணங்கள்

 

எண்ணங்களில் கலந்து

 

கற்பனை கலந்து படைத்தான்

 

பேசும் சித்திரங்களாக...!

 

 

 

பேசாத புத்தபகவான் சித்திரம்

 

ஆசையே துன்பத்துக்கு காரணம்

 

ஓசையில்லாமல் பேசும் 

 

நம்மிடம் மௌனமாக...!

 

 

 

தட்டுங்கள் திறக்கப்படும்

 

கேளுங்கள் கொடுக்கப்படும்

 

அன்புக் கட்டளையிடும்

 

பேசும் ஏசுநாதர் ஓவியம்!

 

 

 

அஹிம்சை சத்தியாக்கிரகம்

 

புன்னகை மாறாமல் பேசும்

 

சத்திய சோதனை தந்த   

 

காந்தியின் புன்னகை சித்திரம்!

 

 

 

எவ்வுயிரும் தம்முயிர்போல்

 

நினைக்கச் சொல்லும்

 

வாடிய பயிரைக் கண்டு

 

வாடி கைமூடி நிற்கும்  

 

வள்ளல் பெருமான் சித்திரம்!

 

 

 

தனி ஒருவனுக்கு உணவு

 

இனி இல்லை என்றால் 

 

ஜெகத்தினை அழித்திடுவேன்

 

முழக்கமிடும் பாரதியின்

 

அழகிய சித்திரக் கைகள்!

 

 

 

கண்ணகி கையில் சிலம்பு  

 

கண்ணன் விரலில் கோவர்த்தனகிரி

 

காவியத்தையே ஓவியமாக்கி

 

கண்முன்னே நிறுத்தும்  

 

பேசும் சித்திரங்கள்!

 

 

 

அன்று நிஜத்தைக் கண்டு

 

பேச முடியாத நாம்

 

இன்று நிழல் சித்திரத்திடம்   

 

பேசி பரவசம் கொள்வோம் !

 

 

 

பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்,

 

வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

 

 

 

 

 

 

 

 

 

 

by Subramanian   on 01 Jun 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.