LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

கெய்ல் அதிரடி - இறுதிப்போட்டியில் நுழைந்தது வெஸ்ட் இண்டீஸ்

"டி-20" உலக கோப்பை தொடரில் முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ் அணி. வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று நடந்த அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய கெய்ல் 75 ரன்கள் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறியது. இலங்கையில், நான்காவது "டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று கொழும்புவில் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி, பேட்டிங்கை தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான்சன் சார்லஸ் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். இரண்டு சிக்சர்கள் அடித்த சாமுவேல்ஸ் 26 ரன்களில் ஆடமிழந்தார். பின் கிறிஸ் கெய்ல் மற்றும் டுவைன் பிராவோ ஜோடி இணைந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை ரன் மழையாக மாற்றினர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. கெய்ல் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 6 சிக்சர், 5 பவுண்டரிகள் அடக்கம். அவுட்டாகாமல் இருந்தார். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் 14 சிக்சர், 13 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.  கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. பத்ரி வீசிய முதல் ஓவரிலேயே வார்னர் 1 ரன்னுடன் வெளியேறினார். மூன்று பவுண்டரி அடித்த மைக்கேல் ஹசி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாட்சன் 7 ரன்களுடன் வெளியேறினார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலிய அணி 16.4 ஓவரில் 131 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக டி-20 உலககோப்பை போட்டியில் பைனலுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை வெஸ்ட் இண்டீசின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் பெற்றார். நாளை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள்  மோதுகின்றன.

by Swathi   on 06 Oct 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.