|
|||||
12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்- அரியலூர் மாவட்டம் முதலிடம் |
|||||
|
2024-25 கல்வியாண்டுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. அதன்படி, 12ஆம் வகுப்பு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.03% ஆக உள்ளது. கடந்த ஆண்டை விட இது அதிகம். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56% என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.
மாணவிகளில் 4,05,472 பேர் அதாவது 96.70 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரம் மாணவர்களில் 3,47,670 பேர் அதாவது 93.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.94 சதவீதமாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 95.71 சதவீதமாகவும், தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.88 சதவீதமாகவும் உள்ளது.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் முதல் இடம் பெற்றுள்ளது. அரியலூர் 98.82 சதவீதத்துடன் முதலிடம் பெற்றுள்ளது. இதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றிருக்கிறது.
தேர்ச்சி விகிதத்தில் அரியலூருக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டம் 97.98 சதவீதத்துடன் இரண்டாமிடம் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் திருப்பூர் மாவட்டம் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 97.53 சதவீதமாக உள்ளது. இதற்கடுத்த இரண்டு இடங்களில் கோவை 97.48 சதவீதத்துடனும், கன்னியாகுமரி 97.01 சதவீதத்துடனும் உள்ளன. 6ம் இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 90.96 சதவீதம், 7வது இடத்தில் சிவகங்கை மாவட்டம் 96.71 சதவீதம், 8வது இடத்தில் விருதுநகர் மாவட்டம் 96.64 சதவீதம், 9வது இடத்தில் பெரம்பலூர் மாவட்டம் 96.58 சதவீதம், 10வது இடத்தில் தூத்துக்குடி மாவட்டம் 96.19 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டம் 3ம் இடம் பிடித்திருந்த நிலையில், இந்த ஆண்டு முதலிடம் பிடித்து சாதித்திருக்கிறது. அதேநேரம் கடந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 12ம் வகுப்பில் கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருந்தது, இந்த ஆண்டு 3ம் இடம் பிடித்திருக்கிறது.
|
|||||
| by hemavathi on 08 May 2025 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|