|
|||||
சென்னையில் செயல்படும் தனியார் மகளிர் விடுதிகளை பதிவு செய்ய கலெக்ட.ர் உத்தரவு! |
|||||
சென்னையில் செயல்படும் தனியார் மகளிர் விடுதிகளை ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை முழுவதும் பணி நிமித்தமாக நாள்தோறும் பலர் வருகை தருகின்றனர். குறிப்பாக மணமாகாதவர்களின் வரவு அதிக அளவில் உள்ளது. இதனால் மாநகரம் மட்டும் அல்லாமல் சுற்றுப்பறப் பகுதிகளிலும் அதிக அளவிலான குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும் தங்குவதற்கான பல விடுதிகளும் அமைந்து உள்ளன. இவற்றில் ஆண்கள், பெண்கள் என இருவரும் தங்கும் விதமாக பிரத்தியேக விடுதிகள் செயல்படுகின்றன. இதற்கிடையில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் மகளிர் விடுதிகள் ஒரு மாதத்துக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இணைய தளத்தில் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பதிவு செய்யாத மகளிர் தனியார் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சண்முக சுந்தரம் எச்சரித்து உள்ளார். |
|||||
by on 22 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|