|
||||||||
கலர்புல் பிரியாணி சோறு(Colorful Biryani Rice) |
||||||||
தேவையானவை : பசுமதி அரிசி - அரை கிலோ பெரிய காரட் - 1 உப்பு - தேவையான அளவு ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை மல்லி இலை - 1 கைப்பிடி பெரிய உருழைக்கிழங்கு - 1 சிறிய இறால் - 200 கிராம் மஞ்சள் பொடி - அரை டீஸ் ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 பச்சை பட்டாணி - 100 கிராம் கயூ - 5 பிளம்ஸ் - 5 பட்டர் - பொரிப்பதற்கு செய்முறை : 1.முதலில் ஒரு பாத்திரத்தில் பசுமதி அரிசியை கழுவி 1/4 டீஸ் ஸ்பூன் மஞ்சள்,சிறிது உப்பு போட்டு அவிய வைக்கவும்.சூடு ஆற முன் ஏலக்காய் பொடி போட்டு கிளறி விடவும். 2.சாதத்தை சூடு ஆறாமல் மூடி வைக்கவும்.காரட், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை சிறிய சதுரம், சதுரமாக வெட்டி வேறு வேறாக சிறிது உப்பு சேர்த்து வைக்கவும். 3.சுத்தம் செய்த இறாலை கால் டீஸ் ஸ்பூன் மஞ்சள்,உப்பு போட்டு பிரட்டி வைக்கவும்.கயூவை சிறு சிறு துண்டங்களாக உடைத்து வைக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து பட்டர் சூடாகியதும் முதலில் இறாலை பொரித்து எடுக்கவும். 4.மீண்டும் அதே வாணலியில் காரட், உருளைகிழங்கு, வெங்காயம், பச்சை பட்டாணி ஆகியவற்றையும் பொரித்து எடுத்து வைக்கவும்.கயூ, பிளம்ஸ் என்பவற்றையும் சிறிது நேரம் சூடான நெய்யில் போட்டு எடுக்கவும். 5.கடைசியாக சூடாக உள்ள சாதத்தினுள், பொரித்து வைத்த எல்லாவற்றையும் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும். |
||||||||
by rajalakshmi on 13 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|