LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

உங்கள் மாவட்டத்திற்குரிய திருக்குறள் நூல்கள் உங்களுக்கு வந்திருந்தால் அதை பெற்று பத்திரமாக வைக்கவும்

19 Aug, 2023

வணக்கம்,
உங்கள் மாவட்டத்திற்குரிய திருக்குறள் நூல்கள் உங்களுக்கு வந்திருந்தால் அதை பெற்று பத்திரமாக வைக்கவும். வரவில்லையாயின் இன்னும் ஓரிரு நாட்களில் வந்துசேரும். விரைவில் அடுத்தக்கட்ட செயல்பாடு குறித்தும், எப்படி நூல்களை வழங்கப்போகிறோம் என்ற தெளிவான வழிகாட்டுதல் பகிரப்படும். நாம் திங்கள் இரவு 8 மணிக்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம். அதில் மாவட்ட தொடர்பாளர்கள் இணைந்து நூல்களை வழங்குவது குறித்து தெளிவு பெறலாம்.

அதற்குள் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் உங்கள் மாவட்ட ஆட்சியர் , தமிழ் வளர்ச்சித்துறை இணை இயக்குநர் , நூலகத்துறை, தலைமைக் கல்வி அலுவலர் உள்ளிட்டவர்களுக்கு ஒரு கடிதம் தயார்செய்து உங்கள் பெயரை மாவட்ட தொடர்பாளராகக் குறிப்பிட்டு நூல்களை அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யும். உங்கள் மாவட்டத்தில் மேலே உள்ள பொறுப்பில் உள்ளவர்களின் பெயர்கள், தொடர்பு குறித்து அறிந்துகொள்ளவும். நேரில் சந்தித்து தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

முதல்முறை என்பதால் கேட்பவர்களுக்கு நூல்கள் வழங்கலாம் என்ற நோக்கில் பொதுவெளியில் பரப்புரை செய்தோம். அதில் பதிவுசெய்த அரசுப்பள்ளிகளுக்கு மட்டுமே தற்போது நூல்கள் வந்துள்ளது. அடுத்தக்கட்டமாக மேலும் கோரிக்கை வைத்துள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படும். ஆண்டுக்கு 2000 நூல்கள் வரை ஒரு மாவட்டத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு முன்பு, உங்கள் மாவட்ட ஆட்சியர், CEO , DEO , மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை இணை இயக்குநர் , மாவட்ட நூலக அலுவலர் ஆகிய அனைவருக்கும் அரசின் முற்றோதல் பரிசுக்கு தயார்செய்யும் வகையில் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் முன்னெடுக்கும் இலவச நூல் வழங்கி, இலவசப் முற்றோதல் பயிற்சி வழங்கும் செயல்பாட்டை விளக்கி கடிதம் அனுப்பப்படும்.

மாநிலக் கல்வியமைச்சர் சென்னையில் தொடங்கிவைத்த இத்திட்டம் மாவட்ட அளவில் வெற்றிகரமாக செயல்பட அடுத்த கட்டமாக நூல் வழங்கும் நிகழ்ச்சி, முற்றோதல் இலவசப் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சிக்காக தயாராவோம்.

திங்கள் இரவு கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளவும். சூம் இணைப்பு விரைவில் பகிரப்படும். காணொளி வழியாக , முடியாதவர்கள் கைபேசி வழியாக இணையவும். அனைத்து மாவட்டம் குறித்தும் உரையாடப்படும். புலனக்குழுவை (Whatsapp )தொடர்ந்து பார்க்கவும்.

நன்றி.
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பாக
ச.பார்த்தசாரதி,
kural.mutrothal@gmail.com

by Swathi   on 20 Aug 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது - விண்ணப்பிக்க அழைப்பு திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது - விண்ணப்பிக்க அழைப்பு
“உலகப் பொதுமறை திருக்குறள்” கையடக்கப் பதிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் “உலகப் பொதுமறை திருக்குறள்” கையடக்கப் பதிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
திருக்குறள் கருத்துக்கள் பரவலாக்கத்தில் தென்னிந்தியச் சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகத்தின் பங்கு திருக்குறள் கருத்துக்கள் பரவலாக்கத்தில் தென்னிந்தியச் சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகத்தின் பங்கு
சென்னையில் வள்ளுவர் கோட்டம் பார்த்துவிட்டீர்களா?  - இசுபெயின் நாட்டுத் திருக்குறள் வாசகரின் மனப்பதிவு சென்னையில் வள்ளுவர் கோட்டம் பார்த்துவிட்டீர்களா? - இசுபெயின் நாட்டுத் திருக்குறள் வாசகரின் மனப்பதிவு
மக்களை வசீகரிக்கும் வள்ளுவர் கோட்டம் - குவியும் மக்கள் மக்களை வசீகரிக்கும் வள்ளுவர் கோட்டம் - குவியும் மக்கள்
லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்  183 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா லண்டன் ஆக்ஸ்போர்ட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 183 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை! தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை!
தவத்திரு அழகரடிகளின் மாபெரும் குறள் செயல்திட்டம் தவத்திரு அழகரடிகளின் மாபெரும் குறள் செயல்திட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.