LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

சமுதாயத் தொண்டு

இளமை நோன்பு, இல்லறம் இரண்டையும் முறையாக ஆற்றியதால் பொருள், இன்பம் எனும் இரு பிரிவுகளைப் பற்றி அனுபவ அறிவு கிடைத்துவிட்டது. இந்த இரண்டும், உடலையும், அலைந்து திரியும் மனதையும் பற்றிய அனுபவ அறிவு ஆகும். மேலும் உயிர், மெய்ப்பொருள் என்னும் இரண்டு மறைபொருட்கள் மனிதன் என்ற இயக்க நிலையத்தில் அடங்கியுள்ளன. இவற்றையறிந்தால் தான் மனிதன் அறிவு முழுமையாகும். அதற்கு ஆசான் மூலம் உயிர்நிலை உணர்ந்து, அதன் மேல் மனதைச் செலுத்தி அகநோக்குப் பயிற்சியால் உயிரின் இருப்பு, இயக்கம், விளைவுகள் பற்றிய அறிவைப் பெறும் காலமே வானப்பிரஸ்தம் எனும் அகத்தவப் பயிற்சிக் காலம். அகத்தவத்தால் அறிவு முழுமைபெற்று விட்டது. இயற்கையைப் பற்றிய முழு விளக்கமும் வாழ்வின் வளம், நெறிமுறைகள் பற்றியும் அனுபவமான அறிவும் கிடைத்துவிட்டது. மேலும் அவன் வாழ்நாள் முழுவதும் ஆற்றவுள்ள கடமை என்ன? தன்னை உருவாக்கி வாழவைத்த சமுதாயத்திற்கு உடல் ஆற்றலையும் அறிவின் விளக்கங்களையும், அர்ப்பணித்து சமூகத் தொண்டு ஆற்ற வேண்டும். பழம் பழுத்து விட்ட பின் மரத்திலிருந்து விடுபட்டு வேறுபடுவதைப் போல, குடும்பம், பொருளுடைமை என்ற இரண்டு சிற்றெல்லைகளிலிருந்து பற்றுக்களை விட்டு மனிதன், இயற்கை, உலகம் என்ற விரிந்த பற்றோடு வாழ்கிறான். இந்தப் பொருள், மக்கள் என்ற உரிமை காட்டும் செயல்களுக்குப் பதிலாக விரிந்த மனத்தோடு உலக மக்கள் அனைவருக்கும் தன்னை உரிமையாக்கி அவன் அறிந்த அறிவின் முழுமைப் பேற்றின் விளக்கங்களை மக்களுக்குப் போதிக்கும் சமுதாயத் தொண்டினைச் செய்து வாழ்கிறான். 

by Swathi   on 20 Jan 2014  0 Comments
Tags: Community   Aid   Community Aid   Samuthaya Thondu   சமுதாயம்   தொண்டு   சமுதாய தொண்டு  
 தொடர்புடையவை-Related Articles
செவி வழித் தொடுசிகிச்சை உருவான கதை செவி வழித் தொடுசிகிச்சை உருவான கதை
விபத்தில் காயமடைந்தவருக்கு மருத்துவம் செய்ய போலீசின் முதல் தகவல் அறிக்கை தேவையில்லை. விபத்தில் காயமடைந்தவருக்கு மருத்துவம் செய்ய போலீசின் முதல் தகவல் அறிக்கை தேவையில்லை.
சமுதாயத் தொண்டு சமுதாயத் தொண்டு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.