LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- லோக் சத்தா (Lok Satta )

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே​வின் மறைவிற்கு லோக்சத்தா கட்சி இரங்கல் !!

இன்று சாலை விபத்தில் உயிரிழந்த மத்திய அமைச்சர் திரு. கோபிநாத் முண்டே அவர்களின் குடும்பத்திற்கும், கட்சியினருக்கும் லோக் சத்தா கட்சி தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. இந்த சம்பவம், நமக்கு 2011-இல் சட்டமன்ற உறுப்பினராக பதிவி ஏற்க சென்னை செல்லும் வழியில் அமைச்சர் மரியம் பிச்சை அவர்கள் விபத்தில் மரணமடைந்தததையும், 2012-ஆம் ஆண்டு சாலை விபத்தில் பலியான சட்டமன்ற உறுப்பினர்திரு. முத்துக்குமரன் அவர்களையும் நினைவுபடுத்துகிறது.


உலக அளவில் இந்தியாவில் தான் விபத்தினால் ஏற்படும் மரணங்கள் அதிகம் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஏ.டி.எஸ்.ஐ அறிக்கையின் படி 2003 முதல் 2012 வரை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்துள்ளது. 2002-ஐ காட்டிலும் 2012-ஆம் ஆண்டு விபத்துகள் 51.8% அதிகரித்து 2012-இல் மட்டுமே 394982 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.


பெரும்பாலான நேரங்களில் விபத்துக்கள் அரசாங்கத்தின் பிரச்சனைகளாக பார்க்கப்படுவதில்லை. ஊடகங்களும் பொதுமக்களும் விபத்துக்களை அரசாங்க பிரச்சனையாக அணுக வேண்டும். நாம் தீவிரவாதத்தை காட்டிலும் விபத்துக்களில் அதிக உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் வருடத்திற்கு சாலை விபத்துகளில் மட்டுமே ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கு அதிகமாக பொருள் இழப்பு ஏற்படுவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்தியாவை போன்ற ஒரு வளரும் நாட்டுக்கு இது மிகப்பெரிய இழப்பாகும்.


ஓர் அமைச்சர் மற்றும் ஓர் சட்டமன்ற உறுப்பினர்ஆகியோர் விபத்துக்களில் இறந்த பின்னரும் தமிழக அரசு இந்த பிரச்சனையை பொருட்படுத்தவில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகாவது மத்திய அரசும் மாநில அரசும் விபத்து பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்.

Condolence Message - Shri.Gopinath Munde

Loksatta Party expresses its condolences to the family of Shri.Gopinath Munde and his party colleagues. The tragic death of Union Minister Gopinath Munde reminds us of the death of another State Minister from Tamil Nadu Mr.Mariam Pitchai in 2011. Mariam Pitchai died in a car accident when he was traveling to Chennai to take oath as an MLA. It also reminds us of MLA Mr.Muthukumaran, a great visionary CPI leader who died in an accident in 2012.

For long statistics reveal that India stands number one among all countries in the number of deaths due to accidents. As per the ADSI report, "The incidence of accidental deaths has shown an increasing trend during the period 2003 -2012 with an increase of 51.8% in the year 2012 as compared to 2002". The number of accident deaths is 394982 in 2012 as per the report. The International Road Federation in 2012 estimated that traffic accidents results in an annual monetary loss of Rs 1 Lakh Crore in India. This is a huge loss for a developing country like India.

Most of the times accidents are not seen as Governance Issues by the Government as well as by the media. This is even after we are loosing more lives in accidents than by Terrorism.

Even the death of a Minister & MLA didn't make the TN Govt work seriously in this issue. We sincerely hope this is not repeated after this death of Union Minister as well by the Central Govt. It is high time we bring down the number of accidents and we cannot afford to lose any more lives.

by Swathi   on 03 Jun 2014  0 Comments
Tags: Gopinath Munde   Gopinath Munde Dies                 
 தொடர்புடையவை-Related Articles
மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே​வின் மறைவிற்கு லோக்சத்தா கட்சி இரங்கல் !! மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே​வின் மறைவிற்கு லோக்சத்தா கட்சி இரங்கல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.