மத்திய திட்டக்கமிஷன் வெளியிட்டுள்ள வறுமைக்கோடு தொடர்பான புள்ளிவிவர விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், மும்பையில் 12 ரூபாய்க்கும், டெல்லியில் 5 ரூபாய்க்கும் முழு சாப்பாடு கிடைப்பதாக காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் கூறியிருக்கிறார். நேற்று மத்திய திட்டக்கமிஷனின் ஏழைகள் தொடர்பான அறிக்கை பற்றி ராஜ் பாப்பரிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது,மக்கள் தினமும் இரு வேளை முழுச்சாப்பாடு சாப்பிட வேண்டும். இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்கப்பட்ட கேள்வி நல்ல கேள்விதான். இப்போதும் மும்பை நகரில், ரூ.12–க்கு நான் முழுச்சாப்பாடு சாப்பிடமுடியும். வடபாவ் இல்லை. சாதம், பருப்பு சாம்பார், காய்கறி கூட்டுதான் என அவர் கூறினார். இதேபோன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷீத் மசூத்தும், டெல்லியில் ஜூம்மா மசூதி அருகில் 5 ரூபாய்க்கு முழு சாப்பாடு சாப்பிடலாம் என கூறினார். காங்கிரஸ் பிரமுகர்களின் இந்த பேச்சு, பொது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
|