சத்தீஸ்கர் மாநிலம் ஜகதால்பூர் அருகே கடந்த சனிக்கிழமை அன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் பரிவர்த்தன் யாத்திரை நடைபெற்றது. அப்போது நூற்றுக்கணக்கான ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் திடீரென தாக்குதல் நடத்தியதில், மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் பட்டேல், அவரது மகன் தினேஷ் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மா உள்பட 27 பேர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர். இதனை அடுத்து ராய்ப்பூர் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பிறகு காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்ற மன்மோகன் சிங் கட்சியினரிடையே பேசியதாவது, மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் நந்தகுமார் பட்டேல், உதய் முதலியார் உள்ளிட்டோர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். எனினும், மாவோயிஸ்ட்டுகளின் தீவிரவாதத்திற்கு அரசு ஒருபோதும் அடிபணியாது எனக் கூறினார்.
|