மதச் சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாடுடன் செயல்படவேண்டியது அவசியம் என்று ஸ்ரீரங்கம் பீடாதிபதிக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.
ஸ்ரீரங்கம் கோவில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 11-வது மடாதிபதியின் மரணத்தை அடுத்து 12-வது பட்டம் ஜீயர் ஸ்வாமிகளாக, ஶ்ரீமான் யமுனாசார்யார் ஸ்வாமி (11-வது ஜீயர் ஸ்வாமிகளின் திருக்குமாரர் ) நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலை வெங்கடவரதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அவரது மனுவில், 11-வது மடாதிபதி தான் இறப்பதற்கு முன்னால் அடுத்த மடாதிபதியாக 3 பேரை தேர்வு செய்து இருந்ததாக உயிலில் குறிப்பிட்டிருப்பதாகவும், அந்த மூவரில் ஒருவர் அல்லாத யமுனாச்சாரியாரை நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், யமுனாச்சாரியாரின் நியமனத்தை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டு உள்ளது, மேலும், மதச் சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படவேண்டியது அவசியம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். மேலும் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்துக்கு புதிய தலைவர் 21 - ம் தேதி பதவி ஏற்க உள்ளார்
|