LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நேர்மையான அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றிபெறுவதில்லை ! சொல்கிறது கருத்து கணிப்பு !

குற்றப்பின்னணி இல்லாத நேர்மையான வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதில்லை என சமீபத்திய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

 

தேர்தல்களில் போட்டியிடும் அரசியல்வாதிகளின் தொடர் வெற்றி காரணம், அவர்களின் சொத்து மதிப்பு ஆகியவை பற்றி ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம், தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை இணைந்து மக்களிடையே ஒரு கருத்து கணிப்பை நடத்தினர். இதன் மூலம் கிடைத்த ஆய்வு முடிவுகள் பின்வருமாறு,

 

குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள், நேர்மையான அரசியல்வாதிகளை விட தேர்தலில் அதிக அளவில் வெற்றி பெறுகின்றனர்.

 

அரசியல் கட்சிகளும் குற்ற பின்னணி கொண்ட அரசியல்வாதிகளுக்கே அதிக இடம் கொடுக்கின்றன.

 

கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை, மாநிலப் பேரவைத் தேர்தல்களில் மொத்தம் 62,847 அரசியல்வாதிகள் போட்டியிட்டுள்ளனர். இதில் 4,181 பேர் தொடர்ந்து இரண்டாவது முறை தேர்தலில் போட்டியிட்டவர்கள்.

 

இதில் 1,615 பேரின் சொத்து மதிப்பு 200 சதவீதம் அதிகரித்துள்ளது. 684 பேரின் சொத்து மதிப்பு 500 சதவீதத்துக்கு அதிகமாகவும், 420 பேரின் சொத்து மதிப்பு 800 சதவீதத்துக்கு அதிகமாகவும், 317 பேரின் சொத்து மதிப்பு 1000 சதவீதத்துக்கு அதிகமாகவும் உயர்ந்துள்ளது.

 

அரசியல்வாதிகளின் குற்றபின்னணி தொடர்பான ஆய்வு :

 

தற்போதைய மக்களவை எம்.பி.க்களில் 76 பேர் (14 சதவீதம்) மீது தீவிரமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே போல மாநிலங்களவை எம்.பி.க்கள் பலர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

 

தற்போதைய எம்.எல்.ஏ.க்களாக உள்ள 4,032 பேரில் 1,258 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

 

தேர்தலில் போட்டியிட்ட 62,847 அரசியல்வாதிகளில் 11,063 பேர் மீது குற்ற வழக்குகள் உண்டு. 5,253 பேர் மீது தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களே அதிக அளவில் தேர்தலில் வெற்றி பெறுகின்றனர்.

 

குற்ற வழக்குகள் ஏதும் இல்லாத தேர்தலில் போட்டியிடுவோருக்கான வெற்றி வாய்ப்பு வெறும் 12 சதவீதமாகவே உள்ளது. அதே நேரத்தில் தீவிர குற்ற வழக்குகள் உள்ளவர்கள் வெற்றி பெறுவது 23 சதவீதமாக உள்ளது.

by Swathi   on 30 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.