|
|||||
நேர்மையான அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றிபெறுவதில்லை ! சொல்கிறது கருத்து கணிப்பு ! |
|||||
குற்றப்பின்னணி இல்லாத நேர்மையான வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதில்லை என சமீபத்திய கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல்களில் போட்டியிடும் அரசியல்வாதிகளின் தொடர் வெற்றி காரணம், அவர்களின் சொத்து மதிப்பு ஆகியவை பற்றி ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம், தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை இணைந்து மக்களிடையே ஒரு கருத்து கணிப்பை நடத்தினர். இதன் மூலம் கிடைத்த ஆய்வு முடிவுகள் பின்வருமாறு,
குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள், நேர்மையான அரசியல்வாதிகளை விட தேர்தலில் அதிக அளவில் வெற்றி பெறுகின்றனர்.
அரசியல் கட்சிகளும் குற்ற பின்னணி கொண்ட அரசியல்வாதிகளுக்கே அதிக இடம் கொடுக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை, மாநிலப் பேரவைத் தேர்தல்களில் மொத்தம் 62,847 அரசியல்வாதிகள் போட்டியிட்டுள்ளனர். இதில் 4,181 பேர் தொடர்ந்து இரண்டாவது முறை தேர்தலில் போட்டியிட்டவர்கள்.
இதில் 1,615 பேரின் சொத்து மதிப்பு 200 சதவீதம் அதிகரித்துள்ளது. 684 பேரின் சொத்து மதிப்பு 500 சதவீதத்துக்கு அதிகமாகவும், 420 பேரின் சொத்து மதிப்பு 800 சதவீதத்துக்கு அதிகமாகவும், 317 பேரின் சொத்து மதிப்பு 1000 சதவீதத்துக்கு அதிகமாகவும் உயர்ந்துள்ளது.
அரசியல்வாதிகளின் குற்றபின்னணி தொடர்பான ஆய்வு :
தற்போதைய மக்களவை எம்.பி.க்களில் 76 பேர் (14 சதவீதம்) மீது தீவிரமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே போல மாநிலங்களவை எம்.பி.க்கள் பலர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
தற்போதைய எம்.எல்.ஏ.க்களாக உள்ள 4,032 பேரில் 1,258 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
தேர்தலில் போட்டியிட்ட 62,847 அரசியல்வாதிகளில் 11,063 பேர் மீது குற்ற வழக்குகள் உண்டு. 5,253 பேர் மீது தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களே அதிக அளவில் தேர்தலில் வெற்றி பெறுகின்றனர்.
குற்ற வழக்குகள் ஏதும் இல்லாத தேர்தலில் போட்டியிடுவோருக்கான வெற்றி வாய்ப்பு வெறும் 12 சதவீதமாகவே உள்ளது. அதே நேரத்தில் தீவிர குற்ற வழக்குகள் உள்ளவர்கள் வெற்றி பெறுவது 23 சதவீதமாக உள்ளது. |
|||||
by Swathi on 30 Jul 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|