|
|||||
கடலூர் பெண் குரூப் -1 தேர்வில் முதலிடம் பெற்று சாதனை |
|||||
![]()
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியை ஒட்டியிருக்கும் வாழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கலைச்செல்வன்- மாலா தம்பதியின் மகள் கதிர்செல்வி.
27 வயதான இவர், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி எஸ்.டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த இவர், கடந்த 2023ம் ஆண்டு குரூப்- 4 தேர்வில் வெற்றிபெற்று அதில் கிடைத்த பணிக்குச் செல்லாமல் குரூப்-1 தேர்விற்குப் படித்து வந்தார்.
கடந்தாண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற குரூப்-1 தேர்வை எழுதியிருந்தார். சில தினங்களுக்கு முன் குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இத்தேர்வில் கதிர்செல்வி மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
‘கடின உழைப்புடன், தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி நம்மை தேடி வரும். நான் தேர்வில் சாதனை படைத்ததற்குக் காரணம் பல்வேறு செய்முறைத் தேர்வுகளைத் தொடர்ந்து எழுதியதுதான்’ என்கிறார் கதிர்செல்வி.
|
|||||
by hemavathi on 13 Apr 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|